கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Donationகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு. எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

தொற்றுத் நோயை எதிர்த்துத் திறம்பட போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

Velammal institution donated Rs 1 crore to corona relief fund

12ம் வகுப்பு பொது (அலகு) தேர்வை வாட்ஸ் அப்-பில் நடத்த தமிழக அரசு திட்டம்

12ம் வகுப்பு பொது (அலகு) தேர்வை வாட்ஸ் அப்-பில் நடத்த தமிழக அரசு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12th students tnமே 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு தள்ளிப் போகுமே தவிர ரத்து செய்யப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் அலகு தேர்வை, வாட்ஸ் அப் மூலமாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே வகுப்பு மாணவ-மாணவியருக்கு என தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.

அந்த விடைத்தாளில் மாணவர் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், ஆடியோ, ஸ்டிக்கர்ஸ், மீம்ஸ், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிடக் கூடாது.

மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12th exams to conduct in whatsapp

கமலை கழுவி ஊற்றிய முருகானந்தம்… மநீம பொதுச்செயலாளர் உட்பட 15 பேர் விலகல்..; முழு தகவல் இதோ..

கமலை கழுவி ஊற்றிய முருகானந்தம்… மநீம பொதுச்செயலாளர் உட்பட 15 பேர் விலகல்..; முழு தகவல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Muruganandamநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சி மக்கள் நீதி மய்யம் படு தோல்வியை சந்தித்தது.

கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு பின்னரும் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக்கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகினார்.

தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

(கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாகவும் கட்சியை சீரமைக்கும் அதிகாரம் கமலிடம் கட்சி வழங்கியுள்ளதாக அதன் துணைத் தலைவர் பொன்ராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.)

இதன்பின்னர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்தார்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். என்றார்.

அதே நாளல் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

(மநீம கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்து இருந்தனர்)

இந்த நிலையில், மநீம கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவரான கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டி 6 பக்கம் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

“எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார் கமல்.

நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம்.

கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமல்ஹாசனிடம் எழுப்பினேன் ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை.

கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது.

நமது கட்சி என்பதை மறந்து, அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார் கமல்.

கமல் தன்னுடைய புகழுக்காக செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல, சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை.

தோல்வியை கமல் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பி விட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.

என்னுடன் சேர்ந்து கட்சியில் இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர்.

வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள்” என்றார் முருகானந்தம்.

இவருடன் கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், பி.ஏ. விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேர் தங்களுடைய உறுப்பினர் & பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam General Secretary Muruganandam quits the party… He says there is dictatorship in the MNM party.

நயன்தாரா தடுப்பூசி போட்டாரா.? அதுவும் ஆக்ட்டிங்.? நெட்டிசன்ஸ் நெத்தியடி கேள்வி.. விக்கி விளக்குவாரா..?

நயன்தாரா தடுப்பூசி போட்டாரா.? அதுவும் ஆக்ட்டிங்.? நெட்டிசன்ஸ் நெத்தியடி கேள்வி.. விக்கி விளக்குவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பரவலைத் தடுக்க பலரும் அனைவரும் கோவிஷீல்டு / கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நயன்தாரா & அவரது காதலர் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது.

இதில் விக்னேஷ் சிவன் போட்டோவில் தடுப்பூசி இருப்பது தெரிகிறது.

ஆனால் நயன்தாரா போட்டோவில் தடுப்பூசி காணவில்லை.

நர்ஸ் தன் விரல்களை வைத்து தடுப்பூசி போடுவது போல ‘போஸ்’ கொடுப்பதாக தெரிகிறது.

இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி விட்டது.

இதற்கு நயன்தாரா விளக்கம் கொடுப்பாரா? அல்லது வழக்கம்போல விக்கி விளக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

vignesh shivan

Vignesh Shivan & Nayanthara Get Their First Dose Of Vaccine ?

BREAKING கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!

BREAKING கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருந்து வருகிறார். அவரால் பழைய படி ஆக்டிவ்வாக செயல்பட முடியவில்லை.

இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட அவர் போட்டியிடவில்லை. அவரது மனைவி பிரேமலதா போட்டியிட்டார்.

தன் கட்சி பிரச்சாரங்களில் பொதுமேடைகளில் பேசாமல் மக்களை பார்த்து கையசைத்து சைகையால் மட்டும் பேசி வாக்கு கேட்டார்.

அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

அதன்பின்னர் ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்த முழு தகவல்கள் மருத்துவமனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.

Captain Vijayakanth admitted in Hospital

காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு அவசியம்..; காவல்துறை கெடுபிடி

காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு அவசியம்..; காவல்துறை கெடுபிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Policeகொரோனா ஊரடங்கு 10 நாட்களாக அமலில் இருந்தாலும் அதனை மீறுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இன்று மே.18 முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு…

“கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த மே.18 (இன்று) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு. காலை 10.00 மணி முதல் பொதுமக்கள் சரக எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு அவசியம்.

கீழ்கண்ட கட்டுபாடுகள் இன்று முதல் அமல்…

* அரசால் அனுமதிக்கப்பட்ட (காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை) நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும்.

*இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

அவசர மருத்துவ சிகிச்சை, மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்ற அனைத்திற்கும் மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்களில் செல்வோர், eregister.tnega.org என்ற இணைய பக்கத்தில், ஆவணங்களுடன் பதிவு செய்து, அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது.

People need to e register to travel within districts

More Articles
Follows