தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் ரிலீசானால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா? என பலர் ஏமாற்றத்துடன் காத்திருக்க, விஜய் படத்தை திரையிட மாட்டோம் என திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தியேட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
திருச்சியில் உள்ள பல தியேட்டர்களில், பிகில் படம்தான் வெளியாகிறது.
எனவே ஒரே படத்தை ரிலீஸ் செய்யாமல் கார்த்தியின் கைதி படத்தை ரிலீஸ் செய்கிறம்.
மேலும் பட ரிலீசின் போது விஜய் அஜித் பெரும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
தியேட்டரிலும் அடாவடித்தனம் தாங்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
தியேட்டர் சீட்டுக்களை நாசப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே அவர்களின் படங்களை திரையிடுவதை தவிர்க்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.
We wont release Vijay and Ajith movies says Ramba theatre