தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவில்பட்டி அருகே நடந்த ஒரு கோயில் திருவிழாவில் நடிகர் விவேக் கலந்துக் கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…
கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தாலும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர்.
மக்கள் தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாகவே உள்ளது. எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.
பின்னர் ரஜினி குறித்து கூறியதாவது…
இந்த தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்பதால் அவர் பின் வாங்கிவிட்டார் என்று அர்த்தமில்லை.
முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என அவர் சொன்னார். அவர் தெளிவாக இருக்கிறார்.” என பேசினார் விவேக்.