தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனால் நீட் தேர்வை நீக்குமாறும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதனிடையில் அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்தார் விஜய் என்பதை பார்த்தோம்.
பொதுவாக இதுபோல் ஒரு பிரபலம் ஒரு இடத்திற்கு சென்றால், அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் காவல்நிலையத்திலும் அனிதா வீட்டிற்கும் தகவல் கொடுக்காமல் திடீரென விஜய் சென்றாராம்.
இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறியதாவது…
“அனிதாவின் இறப்பு எங்களை பாதித்துவிட்டது.
ஒருநாள் காலை வழக்கம் போல் விடிந்தது. திடீரென எழுந்து பார்த்தால் விஜய் எங்கள் வீட்டிற்கு வந்தார். வாரிச்சுருட்டி எழுந்தோம்.
அதற்கு அவர் மெதுவா எழுந்திருங்க. அவசரமில்லை என்று சொன்னார். நான் அவர் உட்கார சேர் எடுக்க போனேன்.
உங்களைத்தான் பார்க்க வந்தேன். பின்பு எங்களோடு தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.
உங்க கண்ணீர் நாளை ஆனந்தக்கண்ணீராக மாறும். அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நினைதேன்.
ஆனால் நான் வந்தால் அந்த நிகழ்வின் போக்கே மாறியிருக்கும்.
எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள். அவளின் மரணம் எங்களை வெகுவாகப் பாதித்தது.
இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என தெரிகிறது.
அனிதாவும் எனக்கு தங்கைதான்
என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன்.
அதன்பின்னர் நான் பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டார்” என்று உருக்கமாக பேசினார் மணிரத்னம்.