தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை 7சி எண்டர்டையின்மன்ட் மற்றும் அம்மா நாராயணா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியல் விஜய்சேதுபதி கலந்துக் கொண்டார்.
அப்போது அவரிடம் எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்? என கேட்டுள்ளனர்.
அதற்கு விஜய்சேதுபதி கூறியதாவது…
‘தமிழக மக்களை பலரும் பல வகையில் சாகடிக்கிறார்கள். நாம் அவர்களை தியேட்டருக்கு வரவழைத்து சாகடிக்கக் கூடாது என நினைத்து கதைகளைத் செலக்ட் செய்கிறேன்.
ஒரு இயக்குனர் கதை சொல்ல வரும்போதே அவரின் கேரக்டர்களை தெரிந்துக் கொள்வேன்.
அவரின் குணம் பிடிக்கவில்லை என்றால் அவருடன் பல மாதங்கள் பணி புரிய முடியாது.
சில நண்பர்கள் கதை சொன்னால் அது பிடிக்கவில்லை என்றாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.
என்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது.
நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படியோ, அப்படித்தான் கதைகள் அமைவதும். சினிமா என்பது மக்களுக்கானது” என விஜய்சேதுபதி கூறினார்.