தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாஸ்டர் பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டிருந்த விஜய்யை அழைத்து சென்று அவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.
மேலும் பைனான்சியர் அன்பு செழியன், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு தினங்களாக சோதனை செய்தனர்.
இதில் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது.
விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.
இந்த நிலையில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதில் சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் சூட்டிங்கில் விஜய் கலந்துக் கொண்டிருப்பதால் அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vijay gets Income Tax Dept notice He seeks more time