தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ கடந்த மார்ச் 31ல் தமிழில் வெளியானது.
இதன் பின்னர் ‘விடுதலை பாகம் 1’ பட தெலுங்கு வெர்ஷன் சிறப்புக் காட்சி அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
அப்போது வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும்போது.., “ஆடுகளம் படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனைச் சந்தித்தேன்.
அவர் தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தார். என்னிடம் கதை ஏதும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
அப்போது ‘வடசென்னை’ படத்தில், அவருக்கான கதாபாத்திரம் குறித்து சொன்னேன். ஆனால், அது சரியாக அமையவில்லை.
அதன்பின்னர் மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். கதை சொன்னேன். ஆனால் அதுவும் ஒத்துவரவில்லை.
அசுரன் படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆரைச் சந்தித்தேன். விரைவில் நிச்சயம் ஒரு படம் சேர்ந்து செய்வோம்.
நான் ஸ்டார் வேல்யூக்காகவோ படம் செய்ய மாட்டேன். கதைக்காகத்தான் படம்.
என் கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
Vetrimaaran talks about working with telugu actors