தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை 28 படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் வெங்கட்பிரபு.
ஆனால் இம்முறை படத்தை தயாரிக்கவிருக்கிறார்.
இவரது ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்போது, நாளை முதல் வேட்பாளர் அறிமுகம் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் வெங்கட்பிரபு.
தற்போது ஒரு சில வேட்பாளர்களை அதாவது கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார்.
சரவணன் ராஜன் என்பவர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
மேலும் மற்ற வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.