திரிஷாவே மன்னித்துவிடு.. உன் திருமணத்தில் என் ஆசி.; அதானிக்கு கப்பம் கட்டும் அதானிந்தியா – மன்சூர் அலிகான்

திரிஷாவே மன்னித்துவிடு.. உன் திருமணத்தில் என் ஆசி.; அதானிக்கு கப்பம் கட்டும் அதானிந்தியா – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன்
எனை மன்னித்துவிடு!

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம்.

குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது.

இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும் அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார் அவர்கள்.

பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர்.

இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே
என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.

—மன்சூர் அலிகான்

Mansoor Alikhan apology to Actress Trisha

த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் மீது குஷ்பூ ஆவேசம்.; சேரி பேச்சு : குஷ்பு மீது விசிக புகார்

த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் மீது குஷ்பூ ஆவேசம்.; சேரி பேச்சு : குஷ்பு மீது விசிக புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த நடிகைக்கும் கிடைக்காத புகழை சம்பாதித்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கு ஒரு காலத்தில் தமிழகத்தில் கோயில் கட்டிய ரசிகர்களும் உண்டு.

தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் குஷ்பூ. திமுக காங்கிரஸ் பாஜக என ஒவ்வொரு கட்சியிலும் சில ஆண்டுகள் பயணித்து வருகிறார் குஷ்பூ.

தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார் குஷ்பூ.

நடிகை திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார் குஷ்பூ.

இதனிடையில் சில தினங்களுக்கு முன் தலித் மக்கள் குறித்து குஷ்பு பேசிய பேச்சு சர்ச்சையானது.

இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.

தலித் மக்கள் பேசும் மொழியை வன்மன் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்…

சில தினங்களுக்கு முன் மணிப்பபூர் விவகாரம் குறித்து குஷ்பு பதில் அளிக்கும் போது.. உங்களை போல சேரி மொழி பேசி எனக்கு பதில் அளிக்க தெரியாது என பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினும் கூறிவந்த நிலையில் திடீரென சேரி என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்திருந்தார் குஷ்பூ.

அதில்.. சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக கிண்டலாக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்பேன்” என பதிவிட்டு இருந்தார்.

VCK Party complaint against Khushbu on recent controversy speech

மின்னாத ‘துருவ நட்சத்திரம்’..; விக்ரம் ரசிகர்களுக்கு கௌதம் வேண்டுகோள்

மின்னாத ‘துருவ நட்சத்திரம்’..; விக்ரம் ரசிகர்களுக்கு கௌதம் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘துருவ நட்சத்திரம்’.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் என்ற அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஆனால் ஐந்து ஆண்டுகளாக இந்த படம் வெளிவராமல் விக்ரம் ரசிகர்களுக்கு சோதனையாக மாறியது. அதிலும் நேற்று வந்த கோர்ட்டு தீர்ப்பு விக்ரம் ரசிகர்களை பரப்பரப்பாக்கியது.

அந்த உத்தரவில்…

நடிகர் சிம்புவின் ‘SUPER STAR’ என்ற படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இன்று (நவ.24) காலை 10.00 மணிக்குள் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆனால் உடன்பாடு ஏற்படாத நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில்..

மன்னிக்கவும்.. இன்று நவம்பர் 24ஆம் தேதி துருவ நட்சத்திர படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை.. ஆனால் உங்கள் ஆர்வம் எங்களை மீண்டும் இயங்க வைக்கிறது.

இன்னும் சில தினங்களில் நிச்சயம் படத்தை திரையிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வாரம் நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

துருவ நட்சத்திரம்

Vikram starring Dhruva Natchathiram release postponed

விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக சினிமாவில் களமிறங்கினார்

விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக சினிமாவில் களமிறங்கினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தத் துறையாக இருந்தாலும் சாதனை செய்தவரின் / செய்யாதவர் ஒருவரின் வாரிசுகள் அந்த துறைக்கு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. அரசியலில் பல வாரிசுகளை பார்த்து வருகிறோம்.

சினிமாவிலும் சிவாஜி அவரின் மகன் பிரபு அவரின் மகன் விக்ரம் என தொடர்ந்து வருகின்றனர். அதுபோல சிவக்குமார் அவரது மகன்கள் சூர்யா கார்த்தி, ரஜினி அவரது மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா, கமல் அவரது மகள்கள் ஸ்ருதி அக்ஷரா, ராதா அவரது மகள் கார்த்திகா, சத்யராஜ் அவரது மகன் சிபி, பாரதிராஜா அவரது மகன் மனோஜ், டி ராஜேந்தர் அவரது மகன் சிம்பு, பாக்யராஜ் அவரது மகன் சாந்தனு, விக்ரம் மகன் துருவ், கார்த்தி மகன் கௌதம் என பல நட்சத்திரங்களை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூர்யா விஜய்சேதுபதி.

இவர் ஏற்கனவே தன் தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து ‘சிந்துபாத்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டு சூர்யாவை வாழ்த்தினர்.

பீனிக்ஸ்

Vijaysethupathi son Surya debut in kollywood

இயக்குனர்கள் ரஞ்சித் – மோகன் பாணியில்லாமல் ‘நவயுக கண்ணகி’-யாக மாறிய கிரண்

இயக்குனர்கள் ரஞ்சித் – மோகன் பாணியில்லாமல் ‘நவயுக கண்ணகி’-யாக மாறிய கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பார்வையில் ஆணவக் கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’.

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.

இக்கதை பல உண்மை சம்பவங்களை தழுவி நகர்கிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சாதியை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஒற்றை கருத்துக்களுடனும், ஒரு தரப்பினை தற்பெருமை சொல்லியும் அல்லது அதற்கு மாறாக கருத்துகளையும் தெரிவித்த வண்ணமே இருக்கிறது.

ஆனால் இக்கதை சற்று வேறுபட்டு சாதியை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் அதன் கொடுமைகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள், தெரியாதவர்கள், புரியாதவர்கள் என்று குழம்பி நிற்கும் சாமானிய மக்களின் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

இப்படத்தை பார்த்து முடிக்கும்போது பார்வையாளருக்கு அவர்களின் சாதிய நிலைப்பாட்டை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’.

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர்.

டிசம்பரில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த பல தகவல்களை இயக்குநர் கிரண் துரைராஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அன்று,
பாண்டிய மன்னனின் அர்த்தமற்ற தீர்ப்பில் தன் கோவலனை இழந்த கண்ணகி மதுரையை பழிதீர்க்க எரித்தாள் .
இன்று,
அர்த்தமற்ற ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கிறார், சுவாதி.

அவளை கட்டாய படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த சுவாதி திருமணத்திற்கு பின் பழிதீர்க்க நவயுக கண்ணகியாய் எடுக்கும் தொடக்கமே கதையின் கரு !! இத்திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் டிசம்பரில் ஷார்ட்ஃபிளிக்ஸ் ( ShortFlix) ஓடிடி-யில் வெளியாகவுள்ளது

வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழன் நான். இப்பொழுது பெங்களூரில் இருக்கிறேன்.
சினிமாவிற்குள் நுழைய நல்ல தொடர்புகள் கிடைக்காத காரணத்தால் தான் குறும்பட பாதையை தேர்ந்தெடுத்தேன். ஜிகர்தண்டா முதல் பாகம் வெளியானபோது தான் சினிமா மீதான ஈர்ப்பு அதிகமானது.

2015லேயே பெங்களூரு பள்ளியில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கிற குறும்படம் எடுத்து அப்போதே யூ ட்யூபில் வெளியிட்டேன்.

அதன்பின் மாநகரம், சூப்பர் டீலக்ஸ் பாணியில் ஒரு ஹைபர்லிங்க் படம் ஒன்றை இயக்கினேன். அதற்காக 35 நிமிடம் பைலட் பிலிம் ஒன்றையும் இயக்கினேன், அதைத்தான் திரைப்படமாக இயக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் காரணமாக அது செட் ஆகவில்லை.

அது ஒரு காரணம் என்றாலும் நான் படமெடுக்க இங்கே வந்த பின்பு சந்தித்த மனிதர்கள் பெரும்பாலானோர் நம்மிடம் பேசிப்பேசியே நம் ஜாதியை பற்றி தெரிந்துகொண்டு அதன்பிறகு நம்மைப் பற்றி அவர்களாகவே ஒரு கணிப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அதனால்தான் இந்த களத்தில் உள்ள ஒரு கதையை படமாக்க வேண்டும் என இந்த படத்தை துவங்கினேன். கதை பெங்களூருக்கு அருகிலேயே நடந்த, என்னை ரொம்பவே பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இயக்குநர்கள் பா,ரஞ்சித், மோகன்.ஜி ஆகியோர் ஜாதியை பற்றி தங்களது கோணத்தில் வெவ்வேறு பாணியில் படம் எடுத்து வருகிறார்கள்.

நானும் இந்தப்படத்தை துவங்கியபோது ஒரு தரப்பினரின் சார்பாக தான் கதையை கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

ஆனால் என்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த பல விஷயங்கள் எனது கருத்தை மாற்றிக் கொள்ள வைத்தன. அதனால் இதில் இருதரப்பினர் பற்றிய நியாயமான மற்றும் நியாயமற்ற விஷயங்களையும் சமமாக பேசியிருக்கிறேன்.

இந்த படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஜாதியை பற்றிய உங்களது கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பது ஒரு பார்வையாளராக உங்களுக்கே தெரியவரும்.

பொதுவாக இதுபோன்ற கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆணின் தரப்பிலிருந்து தான் கதை சொல்லப்படும். ஆனால் நான் மாப்பிள்ளையின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை காட்டியுள்ளேன்.

வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகியவை கதையின் களங்களாக இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று ஊர்களும் மூன்று விதமான மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கின்றன.

நவயுக கண்ணகி

என்னுடைய சொந்த ஊரான வேலூரில் தான் படப்பிடிப்பை நடத்தினோம்.. நானே இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளேன்,.

இங்கே நுழைந்த புதிதில் தமிழில் பேசினால் கூட என்னை கன்னடக்காரனாகவே பார்த்தார்கள். அதனால்தான் என்னுடன் குறும்படத்தில் இருந்தே இணைந்து பயணிப்பவர்களை இதில் இணைத்து கொண்டேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருமே பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் தான்.

அதேசமயம் சினிமாவுக்கு புதியவர்கள் என்றாலும் அனைவரும் மேடை நாடக கலைஞர்களும் கூட.

படப்பிடிப்புக்கு முன்னதாக படத்தின் நட்சத்திரங்களை வைத்து ஒரு மாதம் ஒத்திகை நடத்தினோம்.
இந்த படத்தில் சில துணிச்சலான காட்சிகள் இருக்கின்றன ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் இதில் நடித்த நடிகை அதன்பிறகு வரவில்லை.

அதன் பின்னர் தேர்வானவர் தான் பவித்ரா தென்பாண்டியன். இவர் நாடக உலகை பின்னணியாக கொண்டவர்.
இவரது கேரக்டர் ரொம்ப ‘போல்டாக இருக்கும்.

தான் காதலித்தவனை, ஆணவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள்.
அதன் பின் கட்டாய படுத்தி அவளுக்கு வேறு கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். தன் கண்முன் தனது காதலனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க நினைக்கிறாள்.

அதை முதலிரவு முதலே செயல் படுத்துகிறாள். அவள் எடுத்த முடிவை, செயலை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?!
இதை துணிச்சாலோடு செய்திருக்கிறார் நாயகி பவித்ரா தென்பாண்டியன்.
இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில்.. பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் எடுத்த உண்மையான முடிவுதான் இப்படம்.

என்ன முடிவு??!

டிசம்பர் மாதம் ‘SHORTFLIX’ OTT தளத்தில் பாருங்கள்.

விமல்குமார், டென்சில் என இன்னும் சிலரும் இதே போல நாடக அனுபவத்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

ஒன்னே முக்கால் மணி நேரம் ஓடும் படமாக இது உருவாகியுள்ளது. தமிழில் மட்டுமே இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு சமயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. டிசம்பர் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடுவதற்காக பல ஓடிடி நிறுவனங்களை அணுகியபோது புதியவர்கள் என்பதால் பலரும் மறுத்தனர். ஆனால் ஷார்ட்பிளிக்ஸ் நிறுவனம் தான், இதை ஏற்றுக்கொண்டதுடன் படத்திற்கு கூடுதல் மதிப்பு ஏற்படும் விதமாக பிரபல பின்னணி பாடகிகள் சின்மயி, சைந்தவி உள்ளிட்டோரை பாட வைத்து, படத்திற்காக ஒரு தொகையையும் தங்கள் பங்கிற்கு செலவழித்து எங்களுக்கு உற்சாகம் அளித்தனர். இளைஞர்களின் ஆதரவை நம்பித்தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்

அடுத்ததாக சீரியல் கொலை, அதற்கடுத்து கால்பந்து அரசியல் பற்றி படங்கள் இயக்க உள்ளேன். பெங்களூருவில் இருப்பதைப் போல இந்தியாவிலேயே வேறு எங்கும் கால்பந்து வீரர்கள் இல்லை. ஆனால் அதில் இடம்பெற்று பெருமை சேர்ப்பவர்கள் தமிழர்கள். அதில் நிறைய அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேச இருக்கிறேன்” என்கிறார்.

*நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

கதை- படத்தொகுப்பு – இயக்கம் ; கிரண் துரைராஜ்

*நடிகர்கள்*

பவித்ரா தென்பாண்டியன்
விமல் குமார்
E டென்சல் ஜார்ஜ்
தென்பாண்டியன் K
ஜெயபிரகாஷ்

ஒளிப்பதிவாளர் ; தர்மதீரன் P

இசை அமைப்பாளர் (பின்னணி) ; கெவின் கிளிஃபோர்ட்

இசையமைப்பாளர் (பாடல்கள்) ; ஆல்வின் புருனோ

கலை இயக்குநர் ; மோகன் குமார் தங்கராஜ்

*பாடகர்கள்*

சைந்தவி ஜி.வி.பிரகாஷ்
சின்மயி ஸ்ரீபடா
அனிருத்
ரேணுகா அஜய்

பாடலாசிரியர் ; டேனியல் சில்வானஸ்

ஸ்டண்ட் ; கிரண் S

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

விளம்பரம் ; மூவி பாண்ட்

தயாரிப்பாளர் ; கோமதி துரைராஜ்

.இத்திரைப்படம் மிகவிரைவில் Shortfilx எனப்படும் OTT தளத்தில்..

நவயுக கண்ணகி

Navayuga Kannagi on shortflix OTT flatform

ராஜூமுருகன் உதவியாளர் இயக்கத்தில் சாதி மத அரசியலை பேசும் ‘பராரி’

ராஜூமுருகன் உதவியாளர் இயக்கத்தில் சாதி மத அரசியலை பேசும் ‘பராரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் ‘பராரி’ பேசுகிறது.

சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சமகால அவலங்களை இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சுமார் 6 மாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, NGK, ‘தங்கலான்’ போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு),
ஜி.முத்துக்கனி (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

Parari deals with Religion Caste politics

More Articles
Follows