கௌரவ் டைரக்ஷனில் உதயநிதி நடிக்கும் படம் ஆரம்பமானது

கௌரவ் டைரக்ஷனில் உதயநிதி நடிக்கும் படம் ஆரம்பமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udayanithi manjima mohan and rk suresh joins in director Gaurav movieஇதுவரை தன் சொந்த தயாரிப்பிலே நடித்து வந்த உதயநிதி, தற்போது மற்றவர்களின் பேனர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

இவர் நடிக்கவுள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார்.

வில்லன் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த் சிங் இதில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை போடப்பட்டதை தொடர்ந்து சூட்டிங் தொடங்கியுள்ளது.

தனுஷ் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளருடன் அமலாபால்

தனுஷ் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளருடன் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulதனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’.

2014ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை தனுஷ் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையை ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருக்கிறாராம்.

இதில் கன்னட ஹீரோ மனோரஞ்சன் நாயகனாக நடிக்க, அமலா பாலே அங்கும் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இதனிடையில் மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் சத்யராஜ் இரண்டு கேரக்டரில் ‘முருகவேல்’ படத்திலும் அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தல-தளபதியை போல் விஷாலுக்கும் மாஸ் ஓப்பனிங்

தல-தளபதியை போல் விஷாலுக்கும் மாஸ் ஓப்பனிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஒரு படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் ஹீரோவின் இன்ட்ரோ சாங்குக்கு (அறிமுக பாடல்) மாபெரும் வரவேற்பு இருக்கும்.

ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பாலும் இது போன்ற ஓப்பனிங் சாங் இருக்கும்.

இந்நிலையில் இவர்களின் வரிசையில் விஷாலின் கத்தி சண்டை படத்திலும் இப்படியான ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்களாம்.

‘எவன் நெனச்சாலும் என்னை புடிக்க முடியாது’ என்ற வரிகளோடு இப்பாடல் தொடங்குகிறதாம்.

இப்பாடலை அண்மையில் வெளிநாட்டில் படமாக்கிவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு.

தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் ஜிவி. பிரகாஷ்

மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atlee gv prakashஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெறும் பைரவா படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார் விஜய்.

இதனையடுத்து விஜய், தன் அடுத்த படத்தினையும் முடிவு செய்திருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லி இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் கூட்டணியில் வெளியான ‘தெறி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini family photoரஜினிகாந்தை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிப்பு துறையை விட்டு இயக்கத்திலும் தயாரிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள், ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது சௌந்தர்யா ரஜினிக்கும் ஒரு துறையில் கௌரவ பதவி கிடைத்துள்ளது.

அதாவது இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

 

soundarya animal welfare

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் இரண்டு காமெடியன்கள்

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் இரண்டு காமெடியன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya art stillsசூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சூர்யாவின் பெற்றோர்களாக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடிக்க உள்ளனர்.

இதில் சுரபி முக்கிய வேடத்தில் நடிப்பதாக பார்த்தோம். ஆனால் அவர் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது காமெடியில் கலக்கி வரும் சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் இணைந்து இருக்கிறார்களாம்.

எனவே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என நம்பி இப்படத்திற்கு போகலாம்.

More Articles
Follows