தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இதுவரை தன் சொந்த தயாரிப்பிலே நடித்து வந்த உதயநிதி, தற்போது மற்றவர்களின் பேனர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இவர் நடிக்கவுள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார்.
வில்லன் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த் சிங் இதில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் பூஜை போடப்பட்டதை தொடர்ந்து சூட்டிங் தொடங்கியுள்ளது.