தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
தமிழகத்தில் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெறும் போது இந்த போட்டியை இங்கு நடத்த வேண்டாம் என தமிழக பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான தங்களின் போராட்டம் எப்படி இருக்கும் என பாரதிராஜா கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர் பச்சான், வி.சேகர், வெற்றிமாறன், எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, விவசாய அமைப்பைச் சேர்ந்த பெ.மணியரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அனைத்துக் கட்சியினரும் தங்களது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார்.
இன்று ஏப்ரல் 10 மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் கூடுகிறோம். என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று பாரதிராஜா கூறினார்.
இதனிடையே, ஐபிஎல் போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் கோபமடைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர்பச்சான், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Today 10th April we assemble on Mount Road Then see what we do says Bharathiraja