தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அக்டோபர் 9ஆம் தேதி மாலை தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.
இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.
“21-36 வயதுடையவர்களே சினை முட்டை தானம் செய்யவேண்டும். தானம் செய்பவர்களுக்குத் திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்க வேண்டும்.
இதில் விதிமுறை பின்பற்றப்பட்டதா என்று நயன்தாராவிடம் விளக்கம் கோரப்படும்” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.