அனிருத்தை அடுத்து தமனுக்கு இசையமைக்கும் வாய்ப்பளித்த ஷங்கர்..; ரஹ்மான் கூட்டணி முறிவு.?

அனிருத்தை அடுத்து தமனுக்கு இசையமைக்கும் வாய்ப்பளித்த ஷங்கர்..; ரஹ்மான் கூட்டணி முறிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.

இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த படம் முதல் ஷங்கரின் 95% படங்களுக்கு ரஹ்மான் தான் இசை.

இடையில் அந்நியன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

தற்போது தயாரிப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அப்போதே ஷங்கர் ரஹ்மான் கூட்டணி முறிவா? என சலசலப்பு உருவானது.

தற்போது தனது அடுத்த படத்திற்கும் இசையமைப்பாளரை மாற்றியிருக்கிறார் ஷங்கர்.

தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் இரு படங்களை இயக்கவுள்ளார் ஷங்கர்.

‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ஷங்கர் – ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த தமன், தற்போது ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் படத்தில் பணியாற்றுவது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் தமன்.

Thaman to compose music for director Shankar’s next

17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரத்தை ஓடிடி-க்கு விற்கும் தயாரிப்பாளர்

17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரத்தை ஓடிடி-க்கு விற்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’.

இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனைமரம்’ உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளத்திலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Award winning film Ottrai Panaimaram gets a OTT release

மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari selvaraj ar rahman‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு தன்னுடைய ‘கர்ணன்’ பட வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்கினார் தனுஷ்.

‘கர்ணன்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, நடிகர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.

தனுஷின் கால்ஷீட் டைரி 2 ஆண்டுகளுக்கு பிஸியாக இருப்பதால் மாரி செல்வராஜ் வேறு ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார். இவர் எம்எல்ஏ ஆன பிறகு ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

(கர்ணன் பட வெற்றிக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இதற்கு முன்பே துருவ் விக்ரமை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

மாரி & உதயநிதி இணையும் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘பரியேறும் பெருமாள்’ & ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படம் இது.

இரு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹாட்ரிக் வெற்றி அடிப்பார் மாரி என நம்பலாம். காத்திருப்போம்..

கூடுதல் தகவல்.. : மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படம், மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா இயக்கத்தில் ‘ஆர்டிகள் 15’ ஹிந்தி ரீமேக் ஆகிய படங்கள் உதயநிதி கைவசம் உள்ளன.

AR Rahman to score music for Mari Selvaraj’s next

மீண்டும் வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா

மீண்டும் வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andrea jeremiahபாடகி நடிகை என பன்முக திறமைக் கொண்டவர் ஆண்ட்ரியா.

கமலுடன் ‘விஸ்வரூபம்’, அஜித்துடன் ‘மங்காத்தா’, தனுஷுடன் ‘வடசென்னை’ மற்றும் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

ஹீரோயினை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இப்பட குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andreah to play lead role in Vetrimaaran’s next

‘லிப்ட்’ படத்தை முடித்துவிட்டு ‘ஆகாசவாணி’யில் கவனம் செலுத்தும் கவின்

‘லிப்ட்’ படத்தை முடித்துவிட்டு ‘ஆகாசவாணி’யில் கவனம் செலுத்தும் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை நிகழ்ச்சி தொடர்களில் நடித்தவர் கவின். அப்போதே இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

இதன்பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் கவின்.

தற்போது #லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த ‘லிப்ட்’ படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை வரப்பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

விரைவில் ரிலீசாகவுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கவின் தற்போது ‘ஆகாசவாணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Latest announcement on Kavin’s next flick

என் பெயரில் வரும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல..; குஷ்பூ இப்படி சொல்ல என்ன காரணம்..?

என் பெயரில் வரும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல..; குஷ்பூ இப்படி சொல்ல என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo-2தேசிய கட்சியான பாஜக-வின் பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பு தன் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார்.

இதனால் பலரும் அவரை வம்புக்கு இழுக்க பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பார்.

அவரை ட்விட்டரில் 13 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அதோடு அவரது ட்விட்டர் பதிவுகளும் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீட்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டர் கணக்கை மீட்கும் வரை் அதில் பதிவிடப்படும் கருத்துக்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Khushboo Sundar’s Twitter account hacked

More Articles
Follows