தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘வீரபாண்டியபுரம்’. (இந்த படத்திற்கு முதலில் சிவ சிவா என தலைப்பு வைத்திருந்தனர்.
நடிகர் ஜெய் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த படம் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது சுசீந்திரன் பேசும்போது ரஜினி மற்றும் அஜித் குறித்து பேசினார்.
அதில்…
எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது கை ப்ராக்சர் ஆனது. இதனையறிந்த ரஜினி எனக்கு போன் செய்து பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய முந்தைய படங்களை ரஜினி சார் பாராட்டியுள்ளார்.
நான் ட்விட்டரில் இருந்து விலகிவிட்டேன். அதற்கு முக்கிய காரணம். ஒரு முறை நான் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு பதிவு போட்டேன்.
ஆனால் இப்போது அது தவறு என உணர்கிறேன். அவர் இப்போது நிம்மதியாக இருக்கிறார். அவர் இதுபோலவே எப்போதும் இருக்கட்டும். அவருக்கு அரசியல் செட் ஆகாது.”
இவ்வாறு பேசினார் சுசீந்திரன்.
Suseenthiran talks about Rajinikanth and Ajith