தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் நடிகர் அஜித்தையும் ஒரு முறை அன்பு செழியன் மிரட்டினார்.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் எனத் தெரிவித்தார்.
இதனையறிந்த அஜித் ரசிகர்கள் இதை ஏன் இப்போ தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா.
அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?” என கேள்விகள் கேட்டுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், “அன்புசெழியன் இல்ல யாரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. அஜித் பற்றி பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.
அன்புசெழியன் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
Suseenthiran speech about Ajith and Naan Kadavul issue