தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவி புகழ் நந்தினியின் கணவர் கார்த்தி குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
அவர் தற்கொலைக்கு முயலும் முன்னர் 3 கடிதங்களை எழுதி இருக்கிறாராம். தற்போது அந்த கடிதங்கள் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.
ஒரு கடிதத்தை தன் மனைவிக்கும், மற்றொரு கடிதத்தை தன் அம்மாவுக்கும், 3வது கடிதத்தை தன் தங்கைக்கு எழுதியுள்ளாராம்.
அதில் தன் தற்கொலைக்கு காரணம், நந்தினியின் அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக சில விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மிஸ்டர் சென்னை பட்டத்தை ஒரு முறை வென்றுள்ளவர் கார்த்தி.
தற்போது தி.நகரில் பெரிய ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நந்தினியை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பெயர் வெண்ணிலா.
நந்தினி மணக்க, அவரின் வீட்டாரின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர்.
பின்னர் நந்தினிதான் விருப்பப்பட்டு எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனம் செய்துள்ளார்.