விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த சிம்பு-தனுஷ்

விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unnamed (1)அறிமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இவருடன் கேத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையைமைத்து வருகிறார்.

கடந்த மே 14ஆம் தேதி இதன்ர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னணி குரல் தேவைப்பட்டதாம்.

அதற்கு சிம்புவின் குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடம் கேட்க, சிம்புவும் ஒப்புக் கொண்டு பேசினாராம்.

தற்போது சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

‘விஜய்-விஷால் பயப்படுறாங்க… சிம்பு பயப்படல..’ சீமான் சீற்றம்

‘விஜய்-விஷால் பயப்படுறாங்க… சிம்பு பயப்படல..’ சீமான் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanநடிகர், இயக்குனர் என பிஸியாக இருந்த சீமான், தற்போது தன் கவனத்தை முழுவதுமாக அரசியலில் செலுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சினிமா பற்றிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை.

நான் அரசியலில் ஈடுபட்டு வருவதால், என் இயக்கத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படுகின்றனர்.

சிலம்பரசன் மட்டும்தான் என் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

சில படங்களில் என்னை நடிக்க வைக்கக்கூட சிலர் பயப்படுகின்றனர்.” என்றார்.

‘அஜித்துக்கு காத்திருக்க முடியாது; ஜோதிகா வரட்டும்…’ பிரபல தியேட்டர் முடிவு

‘அஜித்துக்கு காத்திருக்க முடியாது; ஜோதிகா வரட்டும்…’ பிரபல தியேட்டர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Jyothikaஒரு படத்தின் வெற்றி, தோல்வியை சென்னையில் ஒரு சில திரையரங்குகள் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதில் முக்கியமான திரையரங்கம் சென்னை அசோக் நகரில் உள்ள காசி தியேட்டர்.

இதனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ஒரு சில நடிகர்கள் இங்கு வந்து பார்ப்பார்கள்.

இந்நிலையில் கடந்த மாதங்களாக இங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால், தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரை புதுப்பித்த உடன் அஜித்தின் விவேகம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால், தற்போது கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் விவேகம் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போய் உள்ளதால், இனிமேலும் அஜித்துக்காக காத்திருக்க முடியாமல் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தை திரையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

‘ரத்தம் என் ரத்தம்…’ சிம்புவுக்காக வைரமுத்து எழுதிய பாடல்

‘ரத்தம் என் ரத்தம்…’ சிம்புவுக்காக வைரமுத்து எழுதிய பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthu simbu strசிம்பு நான்கு வேடங்களில் நடித்து, இரண்டு பாகமாக உருவாகி வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதன் முதல்பாகம் ஜீன் 23ஆம் தேதியும் இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியாகவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு அறிமுகமாகும் ஒரு பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

STR‏Verified account @iam_str
Intro song penned by our legend #Vairamuthu blessed n thankful  Dedicating it to my true bloods #RaththamEnRaththam #NeengaillamaNaanilla

Lyricist Vairamuthu wrote Intro song for Simbu in AAA movie

‘அரசியல் சிஸ்டம் சரியில்லை; மாற்றம் வேண்டும்..’ ரஜினி பரபரப்பு பேச்சு

‘அரசியல் சிஸ்டம் சரியில்லை; மாற்றம் வேண்டும்..’ ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinikanthதன் ரசிகர்களை கடந்த 4 நாட்களாக சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று 5வது நாள் இறுதிநாள் என்பதால், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…
ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, இவ்வளவு கட்டுப்பாடா இருந்தது. பழகினதுக்கு நன்றி.

ஒழுக்கம்தான் வாழ்க்கையில முக்கியம். அது இல்லைன்னா முன்னேற முடியாது. அதை தெளிவா கடைப்பிடிச்சீங்க. தொடர்ந்து அதை கடைபிடிங்க.

இங்கே பக்கத்தில் இருந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். காவல்துறையினருக்கும் நன்றி.

எனக்கு தமிழக மக்கள்தான் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். பணம் பேர் புகழ் எல்லாம் தந்துள்ளனர்.

என்னை வாழவைத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க வேண்டாமா?

அதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கிறார்கள்.

இங்கு ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அரசியல் சிஸ்டம் சரியில்லை. ஜனநாயகம் கெட்டுப் போய்விட்டது.

அரசியல் குறித்த மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்.

எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மக்களின் சிந்தனையை மாற்ற வேண்டும்.

எல்லாரும் இணைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்“ என்று ரஜினிகாந்த் பேசினார்.

இதுபோன்று தன் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

‘ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி; என்றும் மறக்க முடியாது..’ ரஜினி

‘ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி; என்றும் மறக்க முடியாது..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthகடந்த நான்கு நாட்களாக 15 மாவட்டங்களில் உள்ள தன் ரசிகர் மன்ற உறுப்பினர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ரஜினிகாந்த் என்பதை பார்த்தோம்.

இதனிடையே தன் அரசியல் பிரவேசம் பற்றியும், ரசிகர்கள் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சந்திப்பு நிறைவுநாளாக இருப்பதால், தன் ட்விட்டரில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்…

“ரசிகர்களை சந்தித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்றும் மறக்க முடியாது.” என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth‏Verified account @superstarrajini
Extremely happy after meeting my fans #Memorable #Unforgettable

More Articles
Follows