தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
எப்போதும் போல தன்னுடைய பேச்சில் கலகலப்பும் உண்மையும் கலந்து பேசினார்.
அவர் பேசியதாவது…
“நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து விட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அது உங்கள் எல்லாருக்கும் அறிந்தது தான். கொரோனா வேகமாக பரவியது.
அப்போது என்னை பரிசோதித்த டாக்டர்கள் உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது. மேலும் நான் Immunosuppressant. மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன்.
இந்த சமயத்தில் நீங்கள் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது. இதனால் ஆபத்து என்றனர்.
மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் மற்றவர்களுடன் சேர்ந்து நிற்காமல் 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும்.. நிச்சயமாக மாஸ்க் போட வேண்டும் என்றனர். இது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.
ஒரு கட்டத்தில் நாங்களே வந்து இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கிறோம் என டாக்டர்கள் சொன்னார்கள். எனவே தான் நான் அரசியல் முடிவில் இருந்து பின் வாங்கினேன்.. அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்தேன்” என்றார் ரஜினிகாந்த்.
Rajinikanth speech at sapiens health foundation