மோடி ஐயா.. கொரோனாவ வெளக்கமாத்தால அடிச்சி துரத்துங்க.. – சூரி

மோடி ஐயா.. கொரோனாவ வெளக்கமாத்தால அடிச்சி துரத்துங்க.. – சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriகொரோனா நோய் பரவலை தடுக்க அது விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி அவரது பாணியில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி வருகிறது.

அதில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் பாத்ரூமை க்ளீன் செய்தும் வருகிறார். இடை இடையே விழிப்புணர்வை ஏற்படுத்து பேசுகிறார்.

’மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள் இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். அது வாஸ்தவம் தான்.

ஆனா வீட்டுக்குள் இந்த பக்கிகள் தொல்லையை தாங்கல. எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்றோம்.

எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள்.

அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என பேசியுள்ளார் சூரி.

சத்தியமாக சொல்கிறேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போதே நம்முடைய மூச்சு முட்டுகிறது.

ஆனா சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது.

உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்’ என்று தூய்மைப் பணியாளர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.. ஏஆர். ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.. ஏஆர். ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahmanடெல்லியில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட மத கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ளதாக தகவல்கள் வந்தன.

இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது:

தன்னலமின்றி, உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி.

நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.

கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் பரிசுத்தமான கோயில்.

இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல. அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.

தனிமையில் சில நாட்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.

புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல”

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

அடுப்பு பத்த வைக்கவே வழியில்ல இதுல..; மோடியை சாடிய ‘ஆடை’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aadai director slams Modis Lights off speech in Corono Warகொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனால் இந்திய மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு 10 நாட்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் உரையாற்றினார்.

அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய மக்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர் செய்ய சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Rathna kumar
@MrRathna

வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது

Aadai director slams Modis Lights off speech in Corono War

பொய்யாக ஒரு நிஜத்தை காட்டி மாட்டிக் கொண்ட ‘மாஃபியா’ டீம்

பொய்யாக ஒரு நிஜத்தை காட்டி மாட்டிக் கொண்ட ‘மாஃபியா’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mafia movie in trouble by showing photos of Real incident கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்த மாஃபியா படம் கடந்த 2020 பிப்ரவரி மாதம் வெளியானது.

இப்படத்தின் மேக்கிங் பாராட்டும்படி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் போதை மருந்து கடத்தல் செய்பவருடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறி சிலரின் போட்டோக்களை காட்டியிருப்பார்கள்.

இந்த காட்சியே இப்போது இவர்களை ஒரு பிரச்சினையில் மாட்ட வைத்துள்ளது.

உண்மையில் கனடா நாட்டில் நடந்த புரூஸ் ஆர்தர் என்ற தொடர் கொலையாளியால் கொல்லப்பட்டவர்களின் போட்டோக்கள் அவை என தெரிய வந்துள்ளது.

5 பேரின் புகைப்படங்கள் காட்டப்பட்டது.

அதில் ஒருவரின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் போட்டோவை பயன்படுத்தியுள்ளனர். இது பொறுப்பற்ற செயல் என்று கூறி கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அந்தக் காட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அந்த காட்சியில் உள்ள போட்டோக்கள் மறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த போட்டோ உள்நோக்கமில்லாமல் ஏதேச்சையாக பயன்படுத்தப்பட்டதாக லைகா தெரிவித்துள்ளது.

Mafia movie in trouble by showing photos of Real incident

கொரோனா எதிரொலி: நடிகர்களின் சம்பளத்தை குறைக்க JSK யோசனை

கொரோனா எதிரொலி: நடிகர்களின் சம்பளத்தை குறைக்க JSK யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது தயாரிப்பாளர்களுக்காக மூன்று முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

1, படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து 30 சதவீதம் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

02. இந்த காலக்கட்டத்தில் 3 மாதங்கள் வட்டியோ, இஎம்ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சினிமாவில் உள்ள பைனான்சியர்களும் இதை ஏற்று 3 மாதத்திற்கு வட்டி தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

இயல்பு நிலை திரும்பியதும் நல்ல முறையில் படத்தினை முடித்து வெளியிட உதவியாக இருக்கும்.

03. ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.

அதோடு வெளியீட்டுக்கு தயாராக உள்ள சிறிய படங்கள் வெளியிட முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் மற்ற தயாரிப்பாளர்களின் மனநிலையை உணர்ந்து சொல்கிறேன்.

என தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தெரிவித்துள்ளார்.

தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் பிரசன்னா

தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor prasannaஇளம் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.

நடிகர்கள் தனுஷ், விஷால், விஷ்ணு, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்காத நடிக்காத படத்தையும் தயாரித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படத்தை அப்பட நாயகன் அசோக் செல்வன் அவரின் அக்காவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

விரைவில் நடிகர் பிரசன்னாவும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதை ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.

அந்த படம் ‘கண்ட நாள் முதல் 2’ படமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

More Articles
Follows