தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகயேன்.
இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தையும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஏஆர். ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.
இனி வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பேன் என சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.