தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் கவுண்டமணியின் புதிய பட அறிவிப்பு வெளியானது.
கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘பழனிச்சாமி வாத்தியார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை செல்வ அன்பரசு என்பவர் இயக்குகிறார். இவர் ‘பேய காணோம்’ என்ற படத்தை இயக்கியவர்.
இந்த படத்தை கவுண்டமணியின் நீண்ட கால நண்பரான மதுரை செல்வம் தயாரிக்கிறார்.
விரைவில் இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கவுண்டமணியின் முன்னாள் மாணவர்களாக சிவகார்த்திகேயன் அல்லது சந்தானம் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
கவுண்டமணியின் படம் பற்றி கேள்விப்பட்டதுமே தானாகவே முன்வந்து இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம் யோகி பாபு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Sivakarthikeyan / Santhanam to join Goundamani next film?