தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிறுவயது முதலே சிம்பு சினிமாவில் நடித்து வந்தாலும், அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டும் இருக்கும்.
அதாவது அவர் சொன்ன நேரத்திற்கு சூட்டிங்குக்கு வருவதில்லை. இரவில் முழித்துக் கொண்டு இருப்பார். பகலில் உறங்குவதால் சரியான நேரத்திற்கு வரமாட்டார் என்பது அந்த குற்றச்சாட்டு.
இந்நிலையில் சிம்பு தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது…
‘என்னை நம்பி பணம் போட்டு படமெடுக்கிறாங்க.
அவங்க எதிர்பார்க்குற நடிப்பை நான் கொடுக்கனும். அத கொடுக்கமுடியும் அப்படிங்கிற மனநிலைக்கு நான் வந்தபின்னர்தான் சூட்டிங் ஸ்பாட் வருவேன்.
அதுக்காக யார் திட்டினாலும் கவலையில்லை. சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்ட்டா ஒரே டேக்தான். ஓகே பண்ணிடுவேன்.
அங்க போய் 20 டேக் எடுத்து டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.
சிம்வுவால சூட்டிங் லேட் ஆச்சுன்னு யாராவது சொன்னா, நான் சினிமாவ விட்டே போறேன் என தெரிவித்துள்ளார்.
சிம்புவை வைத்து இரண்டு படங்களை இயக்கிய கௌதம் மேன்னும் ஒன் டேக் ஆர்ஸ்ட்ஸ்ட் சிம்பு என தெரிவித்திருந்தார்.
மேலும் சிம்புவை வைத்து எத்தனை படங்களை இயக்க சொன்னாலும் இயக்குவேன் என அவர் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.