சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் , யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள்.

நாம் மேலே சொன்ன மூவர்கள் டிவியில் நடைபெற்ற ரியால்டி ஷோக்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள்.

ஆனால் தற்போது டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ஒரு நடிகர் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.

அவர்தான் நடிகர் சித்து சித். அதன் விவரம் வருமாறு…

சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவலாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித்.

சித்து சித்

‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ’ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.

இந்த இடத்தை பிடிக்க சித்து சித், பல வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித், நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.சித்து சித்

சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து சித்தும் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க ரெடியாக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் வெள்ளித் திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சித்து சித், சமீபத்தில் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சித்து சித்

Sidhu sid will make his debut as a  hero on the silver screen

தன் அப்பா பெயரை இணைத்து 2வது குழந்தைக்கு பெயரிட்ட சௌந்தர்யா ரஜினி

தன் அப்பா பெயரை இணைத்து 2வது குழந்தைக்கு பெயரிட்ட சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடித்த விஐபி 2 படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தன் முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்த நிலையில் நடிகர் விசாகன் என்பவரை 2தாக திருமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற ஒரு மகன் இருக்கிறார்

இந்த நிலையில் சௌந்தர்யா தாய்மை அடைந்து இருந்தார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌந்தர்யாவுக்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

எனவே ரஜினி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சௌந்தர்யா, விசாகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தன் 2வது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிட்டுள்ளார் சௌந்தர்யா.

ஏற்கனவே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது சௌந்தர்யாவுக்கும் வேத் மற்றும் வீர் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக ரஜினிகாந்துக்கு பேரன்கள் மட்டுமே உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சௌந்தர்யா

Soundharya Rajini again blessed with boy baby

அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் வழங்கி வருகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் தன் கணவனுக்கு படிக்க தெரியாது.. அவர் இன்னும் முன்னேறவில்லை என மகள் முன்னிலையில் பேசியிருந்தார் ஒரு பெண்மணி.

ஆனால் அவருக்கு சிறந்த அப்பா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் கோபிநாத்.

இதனடுத்து ரசிகர்கள் அந்த பெண்ணை குறித்து விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கவிஞர் தாமரை இந்த விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…

” அம்மாக்கள் இல்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பை கூட தாண்ட முடியாது.

அந்த பெண் இதுபோன்ற நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமல் பேசிவிட்டார். சிலர் இதுபோல பேசி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.

கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது பிள்ளைக்கு அவரது தாய் மார்க் பட்டியலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்” என தெரிவித்துள்ளார்.

நீயா நானா

Neeya Naana latest Show Lyricist Thamarai Statement

‘வெந்து தணிந்தது காடு’.. சென்சார் சர்டிஃபிகேட் நியூஸ் போடு…

‘வெந்து தணிந்தது காடு’.. சென்சார் சர்டிஃபிகேட் நியூஸ் போடு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இதில் சிம்புவின் காதலியாக சித்தி இதானி நடிக்க சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்று பாடல்களை வெளியிட்டார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Vendhu Thanindhadhu Kaadu censor certificate updates

விஜய்யை மிரட்ட பாலிவுட் வில்லனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

விஜய்யை மிரட்ட பாலிவுட் வில்லனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அனைத்து படங்களும் தாறுமாறு ஹிட்டானது.

எனவே லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இதில் அர்ஜூன், சஞ்சய்தத், கௌதம் மேனன், பிரிதிவிராஜ் உள்ளிட்ட அரை டஜன் வில்லன்களை களமிறக்க இருக்கிறாராம் லோகேஷ்

இதையும் தன் பாணியில் வழக்கம் போல கேங்ஸ்டர் கதையாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதுவும் கைதி படம் போல இந்த படத்திலும் பாடல்களும் & நாயகியும் கிடையாதாம்.

எனவே விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மட்டும் ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதால் கண்டிப்பாக இது பான் இந்திய படமாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.

சஞ்சய் தத்

Thalapathi 67 will have 6 villains includes Bollywood Actor

‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 12ஆம் தேதி பிரபல காமெடி நடிகர் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவரது கைவசம் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் சந்திரமுகி 2 படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாமன்னன் படப்பிடிப்பில் வடிவேலு இன்று தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

வடிவேலு

வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரியாணி உபசரிப்பு நடந்துள்ளது.

உதயநிதி தயாரித்து வரும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ரவீனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அடுத்த மாதம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

வடிவேலு

Actor Vadivelu celebrated his birthday at Maamannan set

More Articles
Follows