தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
ஓரிரு தினங்களுக்கு முன் தன் கட்சி சார்பில் நிற்கும் 234 தொகுதி வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார் ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதற்கு முன்பு.. தேர்தலில் சீமான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்.
பின்னர் ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்.
தேர்தல் நெருங்கி விட்டதாலும் தன் புதிய கட்சியை பதிவு செய்ய இயலாத நிலை (கால அவகாசம்) உருவானதாலும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றார் மன்சூர் அலிகான்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் விலகல் குறித்து பிரபல ஊடகத்திற்கு சீமான் பேட்டியளித்தார்.
அதில் சீமான் கூறியதாவது…
“தேர்தலில் போட்டியிட பட்டுக்கோட்டை தொகுதியை கேட்டார் மன்சூர் அலிகான்.
ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கச்சியை நிற்க சொல்லிட்டேன். அவரைத் திரும்ப பெறுவது என்பது இயலாத நிலை.
எனவே சேப்பாக்கம் தொகுதியில் நிற்க சொல்லி அந்த தொகுதியையும் கொடுத்து விட்டேன்.
ஒரு நாள் களத்திற்கு சென்று வேலை பார்த்தார். பின்னர் திடீரென்று புதுக்கட்சி தொடங்குகிறேன் என சென்றுவிட்டார். அதுதான் என் வருத்தம்” என சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman explains why manssor ali khan left NTK