தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் நடிகர் என அறியப்பட்ட சீமான் தற்போது ஒரு அரசியல்வாதியாக மேடைப் பேச்சாளராக பிரபலமாகி விட்டார்.
இதனிடையில் தவம் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம் சீமான்.
இப்படத்தில் நாயகான சிம்பு நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படக்கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அமைத்து இருக்கிறாராம் சீமான்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.