தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் டிசம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார்.
அப்போது அவர் உடல்நிலை குறித்த படங்களோ, குரல் பதிவோ எதுவும் வெளியாகவில்லை.
இதனால் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்களே பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செப்டம்பர் 21ஆம் தேதி வரை நலமாக இருந்த முதல்வர் திடீரென எப்படி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவார்.
ஒரு முதல்வர் என்றால் அவர் அருகே 24 மணி நேரமும் டாக்டர் குழு ஒன்று இருக்கும். அதையும் மீறி அவருக்கு எப்படி உடல்நலம் இல்லாமல் போகும்?
அப்படியே உடல்நலம் இன்றி போனாலும் அவருடைய உடலுக்கு என்ன? கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பதை மறைப்பது ஏன்?
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும்.
அவரின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்
நான் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவன் தான். நான்கைந்து முறை அம்மாவை குடும்பத்துடன் நேரில் பார்த்துள்ளேன்.
ரொம்ப அன்பானவர், பாசமிக்கவர். அப்படிப்பட்ட ஒருவர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில் ஏன் யாருமே இதுகுறித்து கேள்வி கேட்கவில்லை. ‘ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்று எம்ஜிஆரே பாடியுள்ளார்.
இது என்ன நாடா? இல்லை அடிமைகள் வாழும் தேசமா? கேள்வி கேட்க கூட முடியாதென்றால் என்ன ஜனநாயகம்? அதைவிட செத்து மடியலாமே
மருத்துவமனையில் ஐசியூ வில் அட்மிட் ஆனாலும் கண்ணாடி வழியாக பார்க்க அனுமதிப்பதுண்டு.
ஆனால் ஜெயலலிதாவை கவர்னர் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காதது ஏன்?
எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சொல்லிவிட்டேன். எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டியது 73 நாட்கள் உடனிருந்து கவனித்த சசிகலாவும், அப்பல்லோ பிரதாப் ரெட்டியும்தான்.
தேவை பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன்.
இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.