ரஜினி – அஜித் வழியில் சசிகுமார்.; இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்

ரஜினி – அஜித் வழியில் சசிகுமார்.; இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு பரிசு வழங்குவார்.

மிகப்பெரிய வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளர் நடிகருக்கோ அல்லது இயக்குனருக்கோ அல்லது இருவருக்குமே தங்க சங்கிலி கார் அல்லது விலையுயர்ந்த பொருட்களை பரிசாக வழங்குவார்.

கடந்தாண்டு ‘விக்ரம்’ படம் வெற்றி பெற்ற போது தயாரிப்பாளர் கமல் தன் இயக்குனருக்கு கார் பரிசு அளித்தார்.

இது போன்ற பலவற்றை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் தான் நடித்த படம் வெற்றி பெற்றதற்கு ஒரு நடிகர் பட தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். அவர்தான் நாயகன் சசிகுமார்.

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்ற படம் ‘அயோத்தி’. மந்திர மூர்த்தி இயக்கிய இந்த படத்தை ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

2021ல் வெளியான ‘அண்ணாத்த’ படம் வெற்றி பெற்றதற்கு அந்த படத்தின் இயக்குனர் சிவாவுக்கு ரஜினிகாந்த் விலை உயர்ந்த பொருளை பரிசளித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல 10 – 15 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த ‘வாலி’ ‘முகவரி’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற போது அஜித் தன்னுடைய இயக்குனருக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sasi Kumar gifted gold chain to ayothi director

இந்தக் கதையை நான் செஞ்சிருக்கலாமேன்னு பொறாமை வந்துட்டு.. – அமீர்

இந்தக் கதையை நான் செஞ்சிருக்கலாமேன்னு பொறாமை வந்துட்டு.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் அமீர் பேசியதாவது…

இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள்.

இந்த டிரெய்லர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது.

ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே, அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார்.

இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ZEE5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது

நடிகர்கள் :
நடிப்பு: வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன்.

தொழில் நுட்ப குழு
இயக்கம் மற்றும் திரைக்கதை: எஸ்.ஆர்.பிரபாகரன்
தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன் (Abi & Abi Entertainment PVT LTD)
இணை தயாரிப்பு – இர்பான் மாலிக்
இசை: தரண்
எடிட்டிங்: பிஜு. V. டான் போஸ்கோ
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

I felt i would have directed the story says Ameer

உங்களுக்கு ஆச்சரியங்கள் தரும் ‘செங்களம்’ தொடர்..; எஸ் ஆர் பிரபாகரன் நம்பிக்கை

உங்களுக்கு ஆச்சரியங்கள் தரும் ‘செங்களம்’ தொடர்..; எஸ் ஆர் பிரபாகரன் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது…

அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். கௌஷிக் சாரிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர்.

எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள், ZEE5 ஆல் தான் இந்தப்படைப்பு உருவானது அவர்களுக்கு என் நன்றிகள்.

இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

Sengalam will give more surprises says SR Prabakaran

எந்த கதைன்னாலும் ஓகே.. எனக்கு கிடைச்ச பெரிய ஆசீர்வாதம் – வாணி போஜன்

எந்த கதைன்னாலும் ஓகே.. எனக்கு கிடைச்ச பெரிய ஆசீர்வாதம் – வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை வாணி போஜன் பேசியதாவது…

ZEE5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக்கொள்வேன். ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள். ZEE5 கௌஷிக் தான் முதலில் இந்தக் கதாபாத்திரம் பற்றிச் சொன்னார்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன்.

ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன்.

இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. செங்களம் படைப்பிற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

Vani Bhojan said ok to any story from Zee productions

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம்.. – விஜி சந்திரசேகர்

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம்.. – விஜி சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது…

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன். பார்த்து ஆதரவளியுங்கள்.” என்றார்.

Viji Chandra sekar talks about working with Zee productions

சென்னைத் தமிழ் பேசினால் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லை – டேனியல்

சென்னைத் தமிழ் பேசினால் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லை – டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் டேனியல் பேசியதாவது…

சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை. ஆனால் இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். செங்களம் தமிழ்த் திரையில் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகர் பிரேம் பேசியதாவது…

“செங்களம் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ் ஆர் பிரபாகரனின் திரைக்கதை வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம். விரைவில் திரையில் காண நானும் ஆவலோடு உள்ளேன் நன்றி.

நடிகை ஷாலி பேசியதாவது…

நான் ஓடிடியில் முதல் முறையாக நடிக்கும் படைப்பு. இதில் கதை தான் நாயகன். இப்படைப்பில் வாய்ப்பளித்த இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சார் மற்றும் படக்குழுவிற்கு, ZEE5 நிறுவனத்திற்கு நன்றி. படைப்பைப் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.” என்றார்.

Actor Daniel speech at sengalam tariler launch

More Articles
Follows