தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட மணிரத்னத்தின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.
தற்போது உருவாகியுள்ள ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
12 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஒரு டிசைனை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளது. நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆனால் மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுப்பாக இருக்கிறார்கள் என்ற தோனியில் இரண்டு நாய் படங்கள் பதிவிட்டுள்ளார்.
இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர்.
தரமணி, அண்டாவ காணோம் படத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனவே இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கம் வரை சென்றது.
இதனையடுத்து அந்த பதிவை சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.
அதன் பிறகு அவர் தெரிவித்துள்ளதாவது…
‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன்.
நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.