சீக்கு வந்த சினிமாவை முதல்ல காப்பாத்துங்க; ரஜினி-கமலுக்கு ஜேஎஸ்கே கோரிக்கை

சீக்கு வந்த சினிமாவை முதல்ல காப்பாத்துங்க; ரஜினி-கமலுக்கு ஜேஎஸ்கே கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKஏற்கெனவே டீசர் லீக், மோசமான விமர்சனம், திருட்டு விசிடி, இணையங்களில் படங்களில் வெளியாவது என பல்வேறு பிரச்சினைகள் திரையுலகம் சந்தித்து வருகிறது.

இதனிடையில் கடந்த இரண்டு வாரங்களாக எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை.

இதனால் தியேட்டர்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள்.

இனி 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிவித்துவிட்டது.

இதுவரை இல்லாத மோசமான சூழ்நிலையை சினிமா சந்தித்து வருகிறது.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதிலும் இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை ஏற்படவில்லை.

இதனால், சூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே. அவர்கள் ரஜினி, கமலுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது…

‘அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது.

நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.

நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை. என பதிவிட்டுள்ளார்.

ரஜினி கமல் இருவரும் இந்த கருத்தை ஏற்று ஏதாவது செய்வார்களா? என ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருக்கிறது.

அம்சமாக இருந்த அஞ்சலி-ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே…

அம்சமாக இருந்த அஞ்சலி-ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjali and hansikaதமிழ் சினிமாவில் அழகுடன் நடிக்கவும் தெரியும் என சில நாயகிகளே நிரூபித்து உள்ளனர்.

அவர்களில் நடிகை அஞ்சலியும் ஒருவர். கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் ஸ்லிம் ஆக இருந்த இவர், அண்மைக் காலமாக கொஞ்சம் குண்டாகி விட்டார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

எனவே மீண்டும் தனது உடலை எடையை குறைத்து தனது ஸ்லிம் பாடியை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவரைப் போல ஹன்சிகாவும் தன் உடல் எடையை குறைத்து உள்ளார்.

அவரும் தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சின்ன குஷ்பூவாக இருந்த ஹன்சிகா இப்படி ஒல்லியாகிட்டாங்களே.. உங்களுக்கு அழகே குண்டுதான் என்றும் சிலர் வர்ணித்து வருகின்றனர்.

தற்போது இந்த இரண்டு படங்களும் இணையத்தில் வைராகி வருகிறது.

எந்த கேரக்டர் என்றாலும் நடிக்க காத்திருக்கும் புதுமுக நடிகர் சுரேஷ்

எந்த கேரக்டர் என்றாலும் நடிக்க காத்திருக்கும் புதுமுக நடிகர் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New actor Suresh is ready to do any kind of rolesபுதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ்.

‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.

அனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு வருடமாக தாடி வளர்த்தார்.

ஆரம்பத்திலேயே கதாபாத்திரத்திற்காக மெனக்கெடும் நடிகர் என்ற பெயர் வாங்கியதோடு, சிறந்த புதுமுக நடிகருக்கான எடிசன் விருதையும் பெற்றார்.

தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சுரேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம்.

இருந்தாலும் வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நல்ல கதாபாத்திரமாக இருந்தால், எந்த வேடங்களிலும் நடிக்க ரெடி என்றும் கூறுகிறார்.

மொத்தத்தில், நடிப்புக்காக எதையும் செய்யும் ஆர்வமுள்ள நடிகர்களில் உருவராக திகழும் சுரேஷ், அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகராகவும் இருப்பதால் இயக்குநர்கள் தாரளமாக அவரை அனுகலாம்.

New actor Suresh is ready to do any kind of roles

சாட்சிகள் சொர்க்கத்தில் படத்தில் அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை

சாட்சிகள் சொர்க்கத்தில் படத்தில் அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Witness in Heaven Trailer and Audio Launch at Australiaஇலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.

சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Witness in Heaven Trailer and Audio Launch at Australia

ஆர்கே. சுரேஷின் அடுத்த அதிரடி டைசன்; அட்டு டைரக்டருடன் இணைகிறார்

ஆர்கே. சுரேஷின் அடுத்த அதிரடி டைசன்; அட்டு டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK sureshசில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது.

இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது .

பிரமாண்டபொருட்செலவில் இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில்’அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள்.

அஜித்-வினோத் இணையும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்.?

அஜித்-வினோத் இணையும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sridevi husband Boney Kapoor may produce Ajith 59 movieசிவா இயக்கவுள்ள ’விசுவாசம்’ படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் அஜித்.

இப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

அஜித் மற்றும் வினோத் இணையும் இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் அஜித்.

தற்போது ஸ்ரீதேவியின் மரணமடைந்து விட்டார். அவரின் 16ஆம் நாள் நினைவு நாளில் அஜித் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridevi husband Boney Kapoor may produce Ajith 59 movie

More Articles
Follows