தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏற்கெனவே டீசர் லீக், மோசமான விமர்சனம், திருட்டு விசிடி, இணையங்களில் படங்களில் வெளியாவது என பல்வேறு பிரச்சினைகள் திரையுலகம் சந்தித்து வருகிறது.
இதனிடையில் கடந்த இரண்டு வாரங்களாக எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை.
இதனால் தியேட்டர்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள்.
இனி 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிவித்துவிட்டது.
இதுவரை இல்லாத மோசமான சூழ்நிலையை சினிமா சந்தித்து வருகிறது.
பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதிலும் இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை ஏற்படவில்லை.
இதனால், சூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே. அவர்கள் ரஜினி, கமலுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது…
‘அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது.
நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.
நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை. என பதிவிட்டுள்ளார்.
ரஜினி கமல் இருவரும் இந்த கருத்தை ஏற்று ஏதாவது செய்வார்களா? என ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருக்கிறது.