ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

ரசிகர்களுக்கு ‘கிக்’ கொடுக்க விளம்பர மோதலில் சந்தானம் – தான்யா ஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது.

இப்படத்தை பார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக தடம் மற்றும், ‘தாராள பிரபு’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார்.

மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன்.

வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்-காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார்.

இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள்.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj )

கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )

எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( ‘DON’ fame Nagoorah Ramachandrah )

ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ),
டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar )

Pro: ஜான்சன் ( Johnson )

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )

சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்

சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்.

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் ’21 கிராம்ஸ்’.

இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

 yaan sasi

இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.

இப்படத்திற்கு சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ் நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறும் போது,

” முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது.

தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம் போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக 52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.

21 கிராம்ஸ்

நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது.

கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது.

அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன.

52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது.

இப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ள கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் .

நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .அவரது இறப்பு எங்களைப் போல வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.

படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது
பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது.” என்கிறார் இயக்குநர் யான் சசி.

21 கிராம்ஸ்

Director – yaan sasi
Actors – poo ramu / moganesh
Dop – sounderrajan / anbu dennis
Music director – vijay siddharth
Editor – pk

’21 Grams’ pilot film bagged international awards

JUST IN ரூ 6 கோடி கேட்டு மிரட்டிய அமலாபாலின் Ex.; ஓ இவ்வளவு விஷயம் நடந்துடுச்சா.??

JUST IN ரூ 6 கோடி கேட்டு மிரட்டிய அமலாபாலின் Ex.; ஓ இவ்வளவு விஷயம் நடந்துடுச்சா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.

இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் (பாய் பிரண்ட்) பவ்நீந்தர் சிங் இன்று கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா பால் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங்
தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால்

அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்து இருந்தார்.

தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அமலா பாலுக்கு ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என ரூ.6 கோடி கேட்டு பவிந்தர்சிங் மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பவ்நீந்தர் சிங்

Amala Paul’s ex-lover held for trying to extort money

இமயமலையில் நடிகர்கள் ரஜினி – அஜித் ; ஒருவர் நிம்மதிக்காக.. மற்றொருவர்..??

இமயமலையில் நடிகர்கள் ரஜினி – அஜித் ; ஒருவர் நிம்மதிக்காக.. மற்றொருவர்..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் முடிந்ததும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இமயமலை சென்று அமைதியைத் தேடுவது ரஜினிகாந்த்தின் வழக்கம்.

ஆனால் தற்போது இமயமலையை சுற்றி வருவதை ரஜினிகாந்த் சமீப காலமாக தவிர்த்து வருகிறார்.

தற்போது இதே பாணியில் நடிகர் அஜித் இமயமலையை சுற்றி வருகிறார்.

ஆனால் இதற்கான காரணங்கள் வேறு…

சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் லடாக்கிற்கு சென்ற அஜித், அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலையை சுற்றியுள்ள சாலைகளில் பைக் பயணம் செய்து வருகிறாராம்

அஜித்

அங்கு 4-5 நாட்கள் வரை அவர் இமயமலையை சுற்றி இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் அஜித்தின் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தில் அஜித் பேசிய பன்ச் டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

சென்னை திரும்பியதும் அஜித்61வது படத்தின் பணியில் இணைவார் என கூறப்படுகிறது.

Actors Rajini – Ajith in Himalayas; One for peace.. another..??

ஷாரூக்கானுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் இதான்

ஷாரூக்கானுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மாமனிதன்’.

வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘விடுதலை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இத்துடன் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதில் வில்லனாக நடிக்க மட்டும் விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘ஜவான்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்க நயன்தாரா & தீபிகா படுகோனே இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

JUST IN பாலியல் தொல்லை: நடிகை அமலாபாலின் முன்னாள் காதலன் கைது

JUST IN பாலியல் தொல்லை: நடிகை அமலாபாலின் முன்னாள் காதலன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.

இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

சமீபத்தில் அமலாபால் தயாரித்து நாயகியாக நடித்திருந்த ‘கடாவர்’ படம் வெளியானது.

இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

அமலாபால்

தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

கூடுதல் தகவல்…

பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா காதலிப்பதாக கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அமலாபால்

#AmalaPaul

JUST IN Sexual harassment: Actress Amala Paul’s ex-boyfriend arrested

More Articles
Follows