தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 16 மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.
அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சந்தானம் பதிலளிக்கையில்.. “ஜெய் பீம் படமாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும் ஒரு மதம் பற்றி உயர்வாக பேசலாம். ஆனால் அடுத்த மதம் குறித்து இழிவாக பேசக்கூடாது-
உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். ஆனால், கிறிஸ்தவ மதம் பற்றி தாழ்வாக பேசக் கூடாது. அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது.
ஏனென்றால், சினிமா என்பது ஒரு இரண்டு மணி நேர பொழுதுபோக்கு.
எல்லா மதத்தினரும், சாதியினரும் தியேட்டர்களில் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிறோம். எனவே சாதி மதம் என்பது தேவையில்லாத விஷயம்.
சாதி மத கவலைகளை மறந்து தான் தியேட்டருக்கு வருகிறோம். எனவே சமுதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்..” என்றார்.
‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
சபாபதி படத்தில் சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பனாக புகழ் நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், டிக்கிலோனா புகழ் மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் திக்கு வாய் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் 2வது ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் நடிப்பில் ‘சர்வம் சுந்தரம்’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.
Santhanam talks about Jai Bhim issue