தியேட்டரை வாங்கும் நயன்தாரா – விக்கி.; சிவகார்த்திகேயன் ஆபிஸில் GST சோதனை.; உண்மை என்ன.?

தியேட்டரை வாங்கும் நயன்தாரா – விக்கி.; சிவகார்த்திகேயன் ஆபிஸில் GST சோதனை.; உண்மை என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொள்ளும் முன்னரே படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

தற்போது புதிய படங்களை தயாரிப்பதிலும் அவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பிரபலமான திரையரங்கை அவர்கள் வாங்கி அதை புதுப்பித்து இரண்டு திரையரங்குகளாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் நம் FILMISTREET தளத்தில் அது போன்ற செய்திகள் எதுவும் பதிவிடவில்லை.

இந்த நிலையில் நயன்தாரா தியேட்டரை வாங்க முயற்சிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை என அவர்களது பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல சிவகார்த்திகேயன் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் GST துறையினர் சோதனை நடத்துவதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது பிஆர்ஓ தரப்பு. அப்படி எதுவும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rumours on sivakarthikeyan and Nayan vignesh shivan new properties

திருச்சியில் விஜய் ரசிகர்கள் அரசியல் மாநாடு.?; செம டென்ஷனில் திமுக

திருச்சியில் விஜய் ரசிகர்கள் அரசியல் மாநாடு.?; செம டென்ஷனில் திமுக

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியலுக்கு வர அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்து வருகிறார் நடிகர் விஜய்.

இதற்கு முன்னோட்டமாக தன் விஜய் மக்கள் இயக்கத்தினரை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வைத்து பரிசோதனை செய்தார்.

விஜய் இயக்க வேட்பாளர்களும் நிறைய தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

மேலும் அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை தன் பனையூர் இல்லத்தில் சந்தித்து வருகிறார் விஜய்.

இதனிடையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய்.

அதற்காக மாணவ – மாணவிகளின் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை தயார் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மாவட்ட இயக்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

மேற்கண்ட செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் விஜய் (ஜூன் 22) பிறந்தநாளையொட்டி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை முன்னிட்டு இப்போதே.. தங்க தளபதி, அன்பு தளபதி, நாளைய தமிழக முதல்வர்’ என விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

விஜய்யை தளபதி என அழைப்பதால் திமுகவினர் செம டென்சனில் இருக்கிறார்களாம்…

இருக்காதா பின்னே..??!!!

Vijay fans political event in trichy

துருவ் விக்ரமை கபடி பயிற்சி எடுக்க கட்டளையிட்ட ‘மாமன்னன்’ இயக்குநர்

துருவ் விக்ரமை கபடி பயிற்சி எடுக்க கட்டளையிட்ட ‘மாமன்னன்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சீயான் விக்ரமின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானார் துருவ். பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் அதே கதையில் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்து திரையில் அறிமுகமானார்.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘மகான்’ படத்தில் தன் தந்தை விக்ரமுடன் நடித்தார்.

நல்ல திறமையும் அழகும் நிறைந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவியும்.. நிறைய படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மெதுவாகவே படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் துருவ்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கிறார் என்ற செய்திகள் வந்தன.

ஆனால் இடையில் உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தை இயக்க மாரி செல்வராஜ் சென்றுவிட்டார்.

தற்போது ‘மாமன்னன்’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

எனவே துருவ் விக்ரம் நடிக்கிற படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ். அதற்காக நாயகனை திருநெல்வேலியில் கபடி பயிற்சி பயிற்சி எடுக்க சொல்லியிருக்கிறாராம் இந்த ‘மாமன்னன்’ இயக்குநர்.

Dhruv Vikram takes Kabaddi training for his next

சரத்பாபுவின் கடைசி ஆசையால்..; சென்னைக்கு கிடைத்த பெருமை

சரத்பாபுவின் கடைசி ஆசையால்..; சென்னைக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு.

நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

பின்னர், சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் சரத்பாபு பிறந்ததும் ஆந்திர மாநிலத்தில், அவர் இறந்ததும் ஹைதராபாத் தற்போது தெலுங்கானா மாநிலம் ஆனால் ஆரம்ப காலத்தில் அது ஆந்திர மாநிலம் தான்.

நடிகர் சரத்பாபு பிறந்ததும், இறந்ததும் ஆந்திர மாநிலமாக இருந்தாலும், அவரது இறுதி சடங்குகள் உடல் தகனம் சென்னையில் தான் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சரத்பாபு இறப்பதற்கு முன்பாக தன்னை சென்னையில் தான் உடல் தகனம் செய்ய வேண்டும் என கூறினாராம்.

இதன் மூலம், நடிகர் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறிய உள்ளது. இது சென்னைக்கு கிடைத்த பெருமை என தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.

actor sarath babu’s last wish comes true

சரத்குமார் & அசோக் செல்வன் இணைந்த ‘போர் தொழில்’ பட டீசர் வெளியானது

சரத்குமார் & அசோக் செல்வன் இணைந்த ‘போர் தொழில்’ பட டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், ‘போர் தோழில்’ படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று மே 23ல் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.

போர் தொழில்

அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும்.

ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்.

சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள “போர் தொழில்” திரைப்படத்தை, E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்சனுடன் சஸ்பெண்ஸ் நிறைந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

Sarathkumar & Ashok Selvan Joined by Por Thozhils movie teaser released

ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காதது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம்.. – ரோகின் வெங்கடேசன்

ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காதது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம்.. – ரோகின் வெங்கடேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.

மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசியதாவது…

இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைக்காவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம்.

பாலகுமாரன் சார் வார்த்தை இது. எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட 2வது படமா வந்திருக்க வேண்டியது.

சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக்கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன்.

ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன் தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப்படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார்.

சுதன் இந்தப்படம் செய்யவில்லை என்ற போது தான் லைக்காவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப்படம் ஓகே ஆனது. ஹீரோ எனும் போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார்.

ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும், அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள்.

ஜெய் வசனம் இல்லாத போது தான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன்.

ஐஸ்வர்யா எதுவானாலும் அசத்திவிடுவார், ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப்பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார்.

ஷிவதா மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். வ்ரித்தி குழந்தைகளை நடிக்க வைப்பது தான் கஷ்டம், ஆனால் வ்ரித்தி எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்.

அம்ஜத் என் எல்லாப்படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச்சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக்கதை மீது நம்பிக்கை கொண்டவர்.

எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக் கொள்வார். டெக்னிகல் டீமில் எல்லோருமே மிகக்கடுமையாக உழைத்துள்ளனர். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப்படம் ஆரம்பிக்கும் போது, வீட்டில் காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றார்.

அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப்படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப்படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார். என் குடும்பத்திற்கு நன்றி. தீராக் காதல் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க, ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் மே 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

Rohin Venkatesan speech at Theera Kaadhal press meet

More Articles
Follows