தெலுங்கு & கன்னடம் மொழிகளிலும் ‘ருத்ர தாண்டவம்’.; அடுத்த ஸ்னீக் பீக் இன்று ரிலீஸ்

தெலுங்கு & கன்னடம் மொழிகளிலும் ‘ருத்ர தாண்டவம்’.; அடுத்த ஸ்னீக் பீக் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த படம் ‘திரௌபதி’.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரித்த இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடித்துள்ளார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா நாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சென்சாரில் U / A சான்றிதழ் பெற்ற இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்துடன் ருத்ரதாண்டவம் படத்தின் அடுத்த SNEAK PEEK இன்று அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் #கன்னடம் (டப்பிங்) மொழிகளில் ருத்ரதாண்டவம் தயாராகி வருகிறது. விரைவில் அந்த மாநிலங்களில் வெளியாகவுள்ளது.

Rudra Thandavam will be made in Telugu and Kannada languages

எது வலிமை..? 90% பெண்கள் வாழும் வாழ்க்கையை சொன்ன ஜோதிகா

எது வலிமை..? 90% பெண்கள் வாழும் வாழ்க்கையை சொன்ன ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் உடன்பிறப்பே…

இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று அக்டோபர் 4 இப்பட ட்ரெய்லர் வெளியானது.

இதுதொடர்பான ஒரு இணைய நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது…

“எனது இரண்டு குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வஸந்த் சார். இருவருக்கும் என்றென்றும் நன்றி.

என் கணவர் சூர்யாவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.

திருமணத்திற்கு பிறகு எனது இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன்.

கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் அர்த்தமுள்ள படங்களில் நடித்து வருகிறேன்.

பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகிறேன். அப்படியான படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

எனது 50-வது படம் ‘உடன்பிறப்பே’. ரொம்ப ஸ்பெஷலான படம்.

இதில் பெண்களின் உண்மையான வலிமையை பிரதிபலித்துள்ளேன். அதுதான் அமைதி. 90% பெண்கள் அப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பட இயக்குனர் சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். இந்த வலிமையான கேரக்டரில் நடித்தது எனக்கு ரொம்ப புதுமை”.

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

Actress Jyothika talks about her new film Udan Pirappe

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரெமோ’ படங்களின் பார்ட் 2..; என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்..?

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரெமோ’ படங்களின் பார்ட் 2..; என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள டாக்டர் படம் அக்டோபர் 9-ம் தேதி தியேட்டர்களின் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன் நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் 2வது பாகம் குறித்து பேசியுள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது. அது ஒரு எபிக் படம்.

எங்களையே அறியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். எனவே அதைத் திரும்ப எடுக்க முடியாது என நினைக்கிறோம்.

‘ரெமோ’ படத்தின் கதைப்படி அதை தொடர முடியாது. ஆனால், ரெமோ நர்ஸ் கேரக்டரை வைத்து வேறொரு படம் எடுக்கலாம்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan talks about his hit films sequels

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தயாரித்த நெற்றிக்கண் படம் அண்மையில் வெளியானது.

தற்போது இவர்களின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கவின் கதைநாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Actor Kavin’s next project with Nayanthara and Vignesh Shivan

ஏமாற்றுபவர்கள் செழிப்பா இருக்க மாட்டாங்க…; சமந்தாவின் பழைய காதலை சொல்கிறாரா சித்தார்த்..?

ஏமாற்றுபவர்கள் செழிப்பா இருக்க மாட்டாங்க…; சமந்தாவின் பழைய காதலை சொல்கிறாரா சித்தார்த்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் 4 வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தனர்.

இதனை நடிகை சமந்தா தன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அது சமந்தாவை குறிப்பிட்டு சொன்னாரோ? என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

சித்தார்த் தன் பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் செழிப்பாக இருக்க மாட்டார்கள். சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என பதிவிட்டுள்ளார்.

எதையும் யாரையும் குறிப்பிடாமல் இப்படி ஒரு பதிவை சித்தார்த் வெளியிட்டுள்ளதால், அவர் சமந்தாவை மனதில் வைத்துத்தான் கூறியிருக்கிறார் என நெட்டிசகன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

One of the first lessons I learnt from a teacher in school… “Cheaters never prosper.” What’s yours?

நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்னர் சித்தார்த் உடன் இணைத்து பேசப்பட்டவர் நடிகை சமந்தா. இவர்கள் காதலிப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் அப்போது கிசுகிசுக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Siddharth reacts to Samantha’s divorce?

இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா, சமந்தா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.

இவர் குண்டாக பப்ளிமாஸ் மாதிரி இருப்பார். இதனால் இவருக்கு நாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் நாயகியின் தோழியாக பல படங்களில் நடித்திருப்பார்.

இதனையடுத்து திடீரென ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்தார்.

அண்மையில் சஞ்சய் என்ற தொழிலதிபரை மணந்தார்.

தற்போது கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா.

எனவே மாலத்தீவில் எடுக்கப்பட்ட தன்னுடைய பிகினி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வித்யுலேகா பகிர்ந்துள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் சிலர் நெகட்டிவ்வான கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.

ஒரு சிலர் ஓவராகவே உங்க விவாகரத்து எப்போது? என்றும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமான வித்யூலேகா தன் ரிப்ளை பதிவில்…

“என் பிகினி உடை புகைப்படத்திற்கா இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்?

1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள்.

ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை உடுத்தும பெண்கள் மட்டும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறார்களா? என கேட்டிருக்கிறார் வித்யூலேகா.

Actress Vidyulekha’s reply to negative comments

More Articles
Follows