தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது லியோன் சுவாமி பேசியதாவது… “ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.
ஜபம் என்பது கிறிஸ்துவ மக்களுக்கு புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும் பிரச்சினையும் உருவாக்குவது போல இப்போது திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இது கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது.
‘ருத்ர தாண்டவம்’ போன்ற மத கலவரத்தை தூண்டும் படங்களால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மதத்தை இழிவுப்படுத்தும் திரைப்படங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம்.” என பேசினார்.
ருத்ர தாண்டவம் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.
முழு திரைப்படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் படத்திற்கு தடை கோரி வழக்கு போடப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Christian churches federation opposes Rudra Thandavam movie