‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

‘ருத்ர தாண்டவம்’ மத கலவரத்தை தூண்டும்.; கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு தலைவர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது லியோன் சுவாமி பேசியதாவது… “ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

ஜபம் என்பது கிறிஸ்துவ மக்களுக்கு புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும் பிரச்சினையும் உருவாக்குவது போல இப்போது திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது.

‘ருத்ர தாண்டவம்’ போன்ற மத கலவரத்தை தூண்டும் படங்களால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மதத்தை இழிவுப்படுத்தும் திரைப்படங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம்.” என பேசினார்.

ருத்ர தாண்டவம் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.

முழு திரைப்படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் படத்திற்கு தடை கோரி வழக்கு போடப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Christian churches federation opposes Rudra Thandavam movie

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் கட்சிகளில் பல பிரிவுகள் இருக்கும். அதில் வழக்கறிஞர் அணி, இளைஞரணி, கலை இலக்கிய அணி என பல அணிகள் இருக்கும்.

இது போல அணிகள் ஆரம்பிக்கப் போவதாகவும் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்!

நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From the desk of STR Announcement on Fans Welfare Association

ஜோதிகாவின் அடுத்த பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தார் சூர்யா

ஜோதிகாவின் அடுத்த பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில், அதிகம் நடித்திராத கிராமத்து வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள்.

மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.

அண்ணனா, கணவனா என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.

இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார்.

இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது.

சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Jyothika’s next film release date announced

ஓடிடி தளத்திற்காக சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’

ஓடிடி தளத்திற்காக சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

“விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமுத்திரகனி கூறுகையில்…

, ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது.

இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்

தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.

முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.

சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும். இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’.

இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது

Samuthirakani-Thambi Ramaiah star in new Family Drama ‘Vinodhaya Sitham’ a ZEE5 Original Film from October 13

சிக்கலில் மாட்டிக் கொண்ட ரஜினி ரசிகர் விஜய் சத்யா

சிக்கலில் மாட்டிக் கொண்ட ரஜினி ரசிகர் விஜய் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி ”
A.வெங்கடேஷ் இயக்குகிறார்.

விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடவிருக்கிறார்.

ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.

தயாரிப்பு – V.பழனிவேல்
திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்

இந்த படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதமாக பிரீ புரொடக்சன் பணியை சிறப்பாக செய்ததால் இத்தனை நடிகர்களை வைத்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.

திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.

அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே இந்த படத்தில் தான் ஒரு மிருகத்தை நடிக்க வைத்திருக்கிறேன்.

அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும், அப்படி ஒரு ஆர்ட்டிஸ்டை போல நடித்துள்ளது. படப்பிடிப்பு முடியும்போது நானும் அந்த நாயும் நண்பர்களாகி விட்டோம்.

விஜய் சத்யா இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

விரைவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் V.பழனிவேல் திட்டமிட்டுள்ளார்.

Rajini fan Vijay Sathya is in trouble

‘டிக் டாக்’ இலக்கியா இயக்குநர் சொன்னபடி ஒத்துழைப்பு தந்தார்… – அருண்குமார்

‘டிக் டாக்’ இலக்கியா இயக்குநர் சொன்னபடி ஒத்துழைப்பு தந்தார்… – அருண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா.

இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார்.

இவரைப் பிரதான நாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத்துறையின் ‘ ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதை தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டுப்பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இறுதியில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.ஒருவழியாக ‘ஏ’ சான்றிதழ் பெற்று விட்ட இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார். அவர் தனது அனுபவம் பற்றி கூறும்போது,…

” படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான் தயாரிப்பாளர் என்பதால் நடிக்க விரும்பவில்லை.பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.

எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு , முன் தயாரிப்பாகக் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.பிறகுதான் நடிக்க வந்தேன்.

எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார். இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்’ டிக் டாக்’ புகழ் இலக்கியா படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது,

” இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன் .

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது .

உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன்.அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்.என்னையும் வாழ்த்த வேண்டும் “என்கிறார்.

படத்தில் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன்,பாடலாசிரியர் லோகேஷ் என ஆர்வமுள்ளவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்று உள்ளது.கதாநாயகி இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும் சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும் படக்குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையைச் சரிவரச் செய்தார் என்று கூறுகிறது படக்குழு.

விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களுக்கு கவர்ச்சி அனுபவமாக படம் அமைய உள்ளது.

Actor Arun Kumar praises Tik Tok Elakkiya’s performance in her debut film

More Articles
Follows