தயாரிப்பாளர் ‘ராக் போர்ட்’ முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்

தயாரிப்பாளர் ‘ராக் போர்ட்’ முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Murugananthamகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன..

இந்நிலையில்
“ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார்.

மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது.

அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது.

ஏப்ரல் அல்லது மே ல் இது திறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறை கொரோனா காலத்தால் பெரும் அளவில் சோர்ந்து போயுள்ளது .

ஆனால் திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் போது, தேக்கி வைக்கப்பட்டுள்ள படைப்புகள் வெளியாகும், சிறந்த படங்கள், எதிர்பார்த்த படங்கள் வெளிவரும் போது சினிமா துறை மீண்டும் புத்துயிர் அடையும், என முருகானந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rockfort Muruganantham’s upcoming projects

வாழ வைத்த டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்து..; ரசிக தெய்வங்களை மறந்துட்டீங்களே ரஜினி.!? (வீடியோ)

வாழ வைத்த டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்து..; ரசிக தெய்வங்களை மறந்துட்டீங்களே ரஜினி.!? (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் அதாவது 2020 டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ரத்த அழுத்தம் அதிகம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினி.

கொரோனா சூழலில் சிக்காமல் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என் டாக்டர்கள் அட்வைஸ் கொடுத்தனர்.

இதனையடுத்து … நீண்ட விளக்கம் கொடுத்து டிசம்பர் 29ஆம் தேதி அன்று… “தான் அரசியலுக்கு வரமாட்டேன்” என ட்விட்டரில் அறிவித்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி பேசியுள்ளார்.

அதில்… அப்பல்லோ ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடவுள் அருளால் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் சேவை சிறப்பானதாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

எந்த மேடைகளில் ரஜினி ஏறினாலும்..”என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்பார்.

ஆனால் தன்னை காப்பாற்றிய டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொன்ன ரஜினி… ரசிக தெய்வங்களுக்கும் மக்களுக்கும் ஒரு புத்தாண்டு வாழ்த்து ட்வீட் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா வருடமும் வாழ்த்து சொன்ன ரஜினி… இவ்வருடம் 2021 கட்சி ஆரம்பம் என்று கூறி பின்னர் அரசியல் கிடையாது என அறிவித்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டதால் வாழ்த்து சொல்லவில்லை என கூறப்படுகிறது.

Rajinikanth new year wishes creates controversy

கார் இன்சூரன்ஸ் கட்டியாச்சா.? நான்_கேட்பேன் கமல்… நெட்டிசன்கள் கிண்டல்.; மநீம விளக்கம்

கார் இன்சூரன்ஸ் கட்டியாச்சா.? நான்_கேட்பேன் கமல்… நெட்டிசன்கள் கிண்டல்.; மநீம விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆளும் கட்சிகள் மற்றும் ஆண்ட கட்சிகளை … “நான் கேட்பேன், நான் கேட்பேன்” என்ற பாணியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தினம் மேடைகளில் பேசி வருகிறார்.

இதனிடையில் காரில் பிரச்சாரம் செய்து வரும் கமல் தனது காருக்கான இன்சூரன்ஸை இன்னும் கட்டவில்லை என தகவல் வெளியானது.

இதனால் “நான் கேட்பேன் கமல் சார்” என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டனர்.

தற்போது கமல் தரப்பில் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

அதில் 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM reacts on Kamal Haasan’s car insurance issue

Kamal Haasan

புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhagan2018ல் ஹிந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அப்பட ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

பிரசாந்த் & சிம்ரன் & கார்த்திக் நடிக்கின்றனர்.

ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை 2021 ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்த படத்திற்கு ‘அந்தகன்’ என்று பெயரிட்டு அதன் டைட்டில் லுக்கை புத்தாண்டு விருந்தாக வெளியிட்டுள்ளனர்.

Andhadhun Tamil remake tilted as Andhagan

புத்தாண்டு தினத்தில் வாரணாசி கோயிலில் சிம்புவின் சாமி தரிசனம்

புத்தாண்டு தினத்தில் வாரணாசி கோயிலில் சிம்புவின் சாமி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மாநாடு் & பத்து தல ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இன்று 2021 புத்தாண்டு முன்னிட்டு நடிகர் சிம்பு கோயிலில் வழிபாடு செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

நெற்றியில் பட்டை உடன் பைஜாமா உடையில் கண் மூடி பிரார்த்தனை செய்கிறார். அவருடன், அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான மகத்தும் சென்றுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Simbu Mahat

Latest pic of Simbu goes viral

செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#AayirathilOruvan2செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

2010-ம் ஆண்டில் ரிலீசான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

அந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

செல்வராகவனின் ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் கார்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ஹீரோவாக தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இப்படம் 2024-ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

More Articles
Follows