தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நந்தினி.
இவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஜிம் பயிற்சியாளர் கார்த்தியை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பிரிய, இவரது கணவர் கார்த்தி நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து நடிகையின் மாமியாரும், கார்த்தியின் அம்மாவுமான சாந்தி கூறியதாவது…
அவர்கள் இருவரும் பிரிய நந்தினியின் அப்பாதான் காரணம். எப்போது பணம் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எப்போதும் நண்பர்களுடன் சுற்ற வேண்டும் என்று சொல்வார் நந்தினி. கார்த்தி சொல்வதை கேட்க மாட்டார். அதான் அவன் இந்த முடிவை எடுத்துவிட்டான்.” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் கார்த்தி அம்மா.