தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
11வது ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மும்பையில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் சரிசமமான அளவில் அதிகம் என்பதால் அவரை வைத்தே தொடக்க நிகழ்ச்சி நடத்துவதென ஐ.பி.எல். நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அவரை அணுகிய போது 15 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 5 கோடி கேட்டதாகவும், இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவர் அண்மையில் வெளியான தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Ranveer Singh demand Rs 5 crores to dance in IPL series