தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இவர்கள் தூத்துக்குடிக்கு சென்ற போது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். வரவேற்பும் அதிகளவில் கொடுக்கப்பட்டது.
மேலும் ரஜினி சென்றபோது விமான நிலையத்தில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை யாருக்கும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். 1 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.
போட்டோக்களை தவிர்க்க கூறினார். அப்படியிருந்தும் அவரின் உத்தரவை மீறி படங்கள் வெளியானது.
தற்போது விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகீன்றனர்.
இந்நிலையில், “பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்!” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
Rajinikanth must learn from Vijay says Director Ameer