Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth must learn from Vijay says Director Ameerதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இவர்கள் தூத்துக்குடிக்கு சென்ற போது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். வரவேற்பும் அதிகளவில் கொடுக்கப்பட்டது.

மேலும் ரஜினி சென்றபோது விமான நிலையத்தில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை யாருக்கும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். 1 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.

போட்டோக்களை தவிர்க்க கூறினார். அப்படியிருந்தும் அவரின் உத்தரவை மீறி படங்கள் வெளியானது.

தற்போது விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகீன்றனர்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்!” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth must learn from Vijay says Director Ameer

கபாலி-தெறி படத்தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சிம்பு

கபாலி-தெறி படத்தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuமணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இதனையடுத்து அதிரடி அறிவிப்பாக 4 படங்களை அறிவித்துள்ளார்.

அதில் தனது 37வது படத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுடன் இணைகிறார்.

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி ஆகிய படங்களை அண்மையில் தயாரித்திருந்தார் தாணு. இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

விரைவில் இவர் சிம்பு நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே துரை இயக்கிய சிம்புவின் தொட்டி ஜெயா படத்தை தாணு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuமணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்கு முன்பே ஓவியா நடிக்கும் `90ml’ படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இதனிடையில் பெரியார் குத்து என்ற ஆல்ப பாடலுக்கு பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவே நடிக்கவுள்ளார். ஆனால் படத்தின் தலைப்பை சற்று மாற்றியுள்ளனர்.

`விண்ணைத்தாண்டி வருவேன்’ என்று தலைப்பிட்டு அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கவுள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu will direct and act in his 35th filmபீப் பாடல் என்ற சர்ச்சையில் சிக்கிய போது திடீரென ஒரு இங்கிலீஷ் படத்தை இயக்கி நடிக்க போவதை அறிவித்தார் சிம்பு.

அந்த படத்திற்கு இடைவேளை கிடையாது என்பதையும் அப்போதே தெரிவித்திருந்தார்.

இடையில் என்ன ஆனதோ? அதுப்பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது.

தற்போது அப்பட குறித்த தகவல்கள் வந்துள்ளது.

அந்த படத்தை விரைவில் சிம்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது அவரின் 35வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

STR aka Simbu will direct and act in his 35th film

சிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்

சிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34ரஜினி நடித்த உழைப்பாளி, கமல் நடித்த நம்மவர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனம் இந்த தலைமுறை நடிகர்களான விஜய் நடித்த `பைரவா’ மற்றும் அஜித் நடித்த `வீரம்’ ஆகிய படங்களை அண்மையில் தயாரித்தது.

தற்போது இந்த படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படம் சிம்புவின் 34வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் நிதியுதவி

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jay met the families of Sterlite victims in Tuticorin and helped themதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பஙகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இவர்களின் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10000 மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று ஜீன் 6ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு நடிகர் விஜய் தூத்துக்குடி சென்றுள்ளார்.

அங்கு ஒரு டூவிலரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதளி அளித்து ஆறுதல் தெரிவித்து விட்டு திரும்பியிருக்கிறார்.

இதற்குமுன் நீட் தேர்வு பிரச்சினையால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த போதும் இதுபோல் நள்ளிரவில் சென்று அந்த குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

jay met the families of Sterlite victims in Tuticorin and helped them

More Articles
Follows