விஜய் பட விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு..?

விஜய் பட விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajini vijayவரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அட்லி-விஜய்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும்‌ ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் மெர்சல் என்பதால் இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் அரசை விமர்சித்து பேசி வருகின்றனர்.

எனவே இவர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

திமுகவில் சேர கமல்ஹாசனை அழைத்த கலைஞர்

திமுகவில் சேர கமல்ஹாசனை அழைத்த கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaignar and kamal haasanதிமுக சார்பில் சென்னையில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெற்றது.

அதில் அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

அப்போது கமல் பேசியதாவது…

திராவிடம் என்பது தமிழக, தென்னிந்தியா மட்டுமல்ல. ஜனகனமன… உள்ளவரை திராவிடம் இருக்கும்.
இந்த விழாவுக்கு வரும்போது பலரும் என்னைக் கேட்டார்கள். அந்த கழகத்தில் சேரப் போகிறீர்களா என்று?

சேர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் 1983 ஆம் ஆண்டே சேர்ந்திருப்பேன்.

அப்போது கருணாநிதி எனக்கு ஒரு தந்தி அனுப்பினார், “நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக்கூடாது?” என்று.

அந்த தந்தியை வெளியே காட்ட தைரியமில்லை; அதற்கு பதில் அனுப்பவும் தைரியம் இல்லை.

இன்றுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. கலைஞரும் இன்றுவரை அதற்கான பதிலை கேட்கவில்லை.

அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்துள்ளேன்.

ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் இருக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை நானும் பயில இங்கு வந்திருக்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.

பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anusha Nairஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர்.

மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக்கொணடிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதா நாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதுவே அனுஷா நாயருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாய் அமைந்தது.

அனுஷா நாயர் ‘மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி ‘யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து மலையாளத்தில் பகத்ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தை செலுத்தினார்.

பரதம்,குச்சுப்புடி நடனத்தில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார் அனுஷா நாயர்.

சினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்கு தன்னை கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை.

தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர்,

’’நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல, உயிரும் கூட” என்கிறார்.

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vignesh shivanபொன்ராம் இயக்கும் படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஞானவேல்ராஜா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இதில் நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் நெருங்கிய தோழி நயன்தாரா என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது உண்மையானால் விக்னேஷ்சிவனின் இந்த செயலில் வியப்பில்லை என்கிறீர்களா? அட. அதுவும் சரிதான்.

வேலைக்காரன் படத்திலும் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்-ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின்; காரணமான கமல்-ரஜினி

கலைஞர்-ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின்; காரணமான கமல்-ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

celebrities at murasoli functionதிரைப்பட விருதுகள் அல்லது சினிமா சார்ந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்துக் கொள்ளும்போது அதில் நிச்சயம் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொள்வார்கள்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் இதுபோன்ற பல விழாக்களில் ரஜினியும் கமலும் கலந்துக் கொண்டுள்ளனர்.

முதல்வர் நடுவில் நிற்க, இவர்கள் இருபுறமும் நிற்பார்கள்.

நேற்று நடந்த முரசொலி பவளவிழாவில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் ரஜினிக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த கமலை அருகில் நிற்குமாறு அழைத்தார்.

கூடவே தன் மகன் உதயநிதியையும் நிற்க அழைத்தார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-த்ரிஷா-கீர்த்திசுரேஷ் இணையும் சாமி2 அப்டேட்ஸ்

விக்ரம்-த்ரிஷா-கீர்த்திசுரேஷ் இணையும் சாமி2 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saamy 2 stillsவிக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் முக்கியமான படம் சாமி.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல்பாக இயக்குனர் ஹரி இயக்கவிருக்கிறார்.

இதில் விக்ரமுடன் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கின்றனர்.
வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் மேற்கொள்கிறார்.

வருகிற செப்டம்பர் முதல் இப்படத்தின் சூட்டிங்கை தொடங்கி, சென்னை, நெய்வேலி, ஜெய்ப்பூர், நொய்டா, ஆக்ரா, காத்மண்டு ஆகிய பகுதிகளில் படமாக்கவிருக்கிறார் ஹரி.

2018 ஜனவரிக்குள் இதன் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows