தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அட்லி-விஜய்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் மெர்சல் என்பதால் இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் அரசை விமர்சித்து பேசி வருகின்றனர்.
எனவே இவர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.