தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி என்பவர் சமீபத்தில் விஜய் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார் என்று பேசி இருந்தார்.
பெரும்பாலும் விஜய் படங்களையும் விஜய்யையும் போற்றியே பேசுவார் பிஸ்மி.
இதனால் அடிக்கடி ரஜினி ரசிகர்களுக்கு மத்தியிலும் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இவர் மீதான கருத்து தாக்குதல்கள் ஏற்படும்.
தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு விஷயத்தை அவர் பேசியிருப்பதால் ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்து நேராக பிஸ்மி அலுவலகத்திற்கு சென்று அவரிடம் இதற்கான விளக்கம் கேட்டனர்.
மேலும் இதுபோன்று மீடியாக்களில் நீங்கள் பேட்டி அளிக்கக்கூடாது.. ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார்.. அவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று பேசினர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்..
“சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.
தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் இருந்தார். அவருக்கு பின் அந்த இடத்திற்கு எம்ஜிஆர் வந்தார்.
சினிமாவில் ஜெயித்து எம்ஜிஆர் பின்னர் அரசியலில் நுழைந்த பின்னர் அப்போதே ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அதன் பிறகு விஜய் அந்த இடத்திற்கு தற்போது வந்துள்ளார். எனவே ரஜினி ரசிகர்கள் ஒரு பத்திரிக்கையாளரை எச்சரிப்பது சரியல்ல.
ரஜினி ரசிகர்களுக்கு முதிர்ச்சியும் அனுபவம் பொறுப்பும் உள்ளது என நம்புகிறேன். எனவே இனி அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது.
இதனை ரஜினியும் விரும்ப மாட்டார்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சீமான்.
விரிவான அறிக்கை இதோ…
Rajini fans warn journalist who supported Vijay.; Seeman angry