தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த பிரபுதேவா தற்போது தயாரிப்பாளராகவும் பிஸியாகிவிட்டார்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இவர் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது ‘தபாங்3’ படத்திற்காக மீண்டும் சல்மான்கானை இயக்கவிருக்கிறார்.
மீண்டும சல்மான்கானுடன் பணியாற்றுவது குறித்து அவர் பேசியதாவது..
முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேச ஆரம்பித்தோம். இப்போது நல்ல நண்பர்களாக ஆகிவிட்டோம்.
அவரைப் போன்று திரை உலகில் உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது.
அவர் அன்பானவர். கடின உழைப்பாளி. பல விஷயங்களில் ரஜினி சார் போன்றவர்.
அவர்கள் இருவருக்கும் தனி தனி ஸ்டைல் உள்ளது. யாரையும் கவர வேண்டும் என முயற்சிக்கமாட்டார்.
ஆனால் பார்ப்பவர்களுக்கு பிடித்து போகும்.” என்று பேசினார்.
Rajini and Salman Khan have same characters says Prabu Deva.jpg