மீண்டும் ரஜினியுடன் மோத அஜித்தின் ‘வலிமை’யான ப்ளான்

மீண்டும் ரஜினியுடன் மோத அஜித்தின் ‘வலிமை’யான ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Ajith movies clash on 2020 Diwaliரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் இப்பட சூட்டிங் துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்து ஆண்டு 2020 தீபாவளி சமயத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்துடன் மோதும் வகையில் அஜித்தின் வலிமை படமும் 2020 தீபாவளிக்கு வெளியாகிறது.

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

வலிமை பட சூட்டிங் வருகிற டிசம்பர் 13ல் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

இந்த 2019 ஆண்டில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதின.

Rajini and Ajith movies clash on 2020 Diwali

BREAKING என் மீது மக்கள் வச்ச நம்பிக்கை வீணாகாது…; ரஜினி ஓபன் டாக்

BREAKING என் மீது மக்கள் வச்ச நம்பிக்கை வீணாகாது…; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont disappoint peoples trust on me says Rajini at Darbar eventதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த விழாவிற்கு வழக்கம்போல நயன்தாரா வரவில்லை.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது…

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது. பின்னர் கஜினி படம் பார்த்தேன்.

அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்தார். ஒரு ஒன் லைன் சொன்னார். ஆனால் அதை திரைக்கதையாக அமைக்க 3 மாதம் வேண்டும் என்றார். மேலும் கஜினி இந்தி படத்தை இயக்கி வருவதாக கூறினார்.

அப்போது நான் சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் எந்திரன் படம் பண்ண ஆரம்பித்து விட்டேன்.

இப்போதுதான் தர்பார் படம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.

இயக்குநர் பாலசந்தர் ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என நினைத்தார். எனக்கு அந்த பெயரை வைத்தார்.
அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அந்த நம்பிக்கை காப்பாற்றியுள்ளேன். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

தற்போது நெகட்டிவ்வாக பேசிறார்கள். அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள்.

ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம். என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், 70வது பிறந்தநாள். ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

I wont disappoint peoples trust on me says Rajini at Darbar event

BREAKING சிவனோட சிட்டிங்… எமனோட கட்டிங் போட்டவர் ரஜினி… விவேக் பேச்சு

BREAKING சிவனோட சிட்டிங்… எமனோட கட்டிங் போட்டவர் ரஜினி… விவேக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Viveks punch dialogue at Darbar Audio launchமுருகதாஸ் இயக்கி ரஜினி நடித்துள்ள படம் தர்பார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துக் கொண்டு பேசியதாவது…

இந்த மேடைக்கு வந்த உடனே ரஜினி ஸ்டைல் வந்துட்டு.

நான் 3 எழுத்து சொல்றேன். அதை கேட்டால் இந்த அரங்கமே 10 நிமிடம் அதிரும். ஏனா இங்க இருப்பது ரஜினி ரசிர்கர்கள் இல்ல. ரஜினி வெறியர்கள்.

ரஜினி உடல்நிலை சரியில்லாதபோது அவர் மீண்டு வர கடவுளிடம் எல்லாரும் செய்த பிரார்த்தனைகள் தான் காரணம்.

ரஜினி சார் சிவனிடம் சிட்டிங்கும் போடுவார். எமனிடம் கட்டிங்கும் போடுவார். அதான் எமனிடம் கட்டிங் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

இதை முருகதாஸ் முடிந்தால் தர்பாரில் பன்ச் டயலாக்காக வைக்க வேண்டும்” என பேசினார் விவேக்.

Actor Viveks punch dialogue at Darbar Audio launch

BREAKING தர்பார் இசை விழாவில் சீமானை கிழித்து தொங்கவிட்ட லாரன்ஸ்

BREAKING தர்பார் இசை விழாவில் சீமானை கிழித்து தொங்கவிட்ட லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrance slams Seema at Darbar audio launchரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது…

இந்த கூட்டத்தில் கடைசியாக நிற்க வேண்டிய என்னை இன்று முதல் வரிசையில் உட்கார வைத்தவர் என்றால் அது தலைவர் ரஜினி தான்.

தன்னுடைய குடும்பத்தை கூட 2வது வரிசையில் தான் அமர வைத்துள்ளார்.

யார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியைப்போல் தன்னடக்கம், அமைதி வராது.

அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? யாராவது 100வது படத்தில் ஆன்மீகத்தை சொல்வார்களா? தங்கள் 100வது படம் மாஸ் ஆக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் ராகவேந்திரா மூலம் சொன்னார்.

அற்புதம் அதிசயம் என்ற வார்த்தைகள் சாதாரணமானவை. ஆனால் அது ரஜினி சொன்ன பிறகுதான் அது பெரிதாக பேசப்படுகிறது.
அந்த அதிசயமே அற்புதமே ரஜினி சார்தான்.

ரஜினி பேசினால் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்; டேய் பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்.
தற்போது ஒருவருக்கு அரசியல் நாகரீகம் என்பதே கிடையாது. ரஜினி ஒருவரை கூட தவறாக பேச மாட்டார்.

ஆனால் அவரை பற்றி ஒருவர் தவறாக எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார். அவரின் பெயரை கூட சொல்ல கூட எனக்கு தோனல.

நான் பதவிக்கு வந்தால் எல்லாரையும் கொன்றுவிடுவேன் என்கிறார். இதுதான் தலைமையா?

நான் இதுபற்றி பேச கூடாது என நினைத்தேன். ஆனால் இது சரியான நேரம். அதான் பேசுகிறேன்.

நான் தலைவர் வீட்டூக்கு அடிக்கடி போன் பண்ணி பேசுவேன். இதன்பின்னர் என்னிடம் தலைவர் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை.

என் தலைவன பத்தி பேசுனா நானும் பேசுவேன் என சீமானை சீண்டினார் லாரன்ஸ்.

மேலும் பேசியதாவது…

நான் சின்ன வயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்தீருக்கிறேன். அது அந்த வயசு. பிறகுதான் ரஜினி கமல் நட்பு தெரிந்தது” என்றார்.

Raghava Lawrance slams Seema at Darbar audio launch

எம்ஜிஆர் சாயல் ரஜினிட்ட இல்ல.. ரஜினி சாயல் எல்லார்ட்டயும் இருக்கு – முருகதாஸ்

எம்ஜிஆர் சாயல் ரஜினிட்ட இல்ல.. ரஜினி சாயல் எல்லார்ட்டயும் இருக்கு – முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Indian cinema all actors follow Rajini style says Murugadoss“தர்பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

அப்போது முருகதாஸ் பேசியதாவது…

நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான்.

நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல இருந்த்து

எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி தான் என்பார்கள். ஆனால் எம்ஜிஆரின் சாயல் ரஜினியிடம் இல்ல.

ஆனால் ரஜினி சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் தெலுங்கு என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும்” என பேசினார் முருகதாஸ்.

In Indian cinema all actors follow Rajini style says Murugadoss

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Artist AP Sridhar in Jadaஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.

பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.

இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

More Articles
Follows