தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மின்னல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புறநகர்.
இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் கமல் கோவின்ராஜ்.
நாயகிகளாக சுகன்யா, அஸ்வின் சந்திரசேகர் நடிக்க இவர்களுடன் தேனி முருகன், கதிரவண்ணன் நடித்துள்ளனர். அனல் அண்ணாமலை வில்லனாக நடித்துள்ளார்.
இசையை இந்திரஜித் கவனிக்க, ஒளிப்பதிவை விஜய் திருமூலம் செய்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த விழாவில் நிறைய சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக வி. சேகர், ஜாக்குவார் தங்கம் பேசினர். அதனையடுத்து மன்சூர் அலிகான் பேச அழைக்கப்பட்டார்.
அவர் 3 நிமிடம் மட்டுமே பேசினார். அப்போதும் கூட ஏன் ரஜினி பெயரை சொல்ல பயப்படுகிறீர்கள் என பேசிவிட்டு திடீரென ஜன கன மண என்று நம் தேசிய கீதத்தை பாட தொடங்கிவிட்டார்.
இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
இந்த பட தயாரிப்பாளர் மற்றும் நாயகன் பட விழாவில் பேசவில்லை.
மன்சூர் அலிகான் திடீரென இப்படி தேசிய கீதத்தை பாடி விழாவை நிறைவு செய்துவிட்டாரே இனி நாம் எப்படி பேசுவது? என நொந்தபடியே விழாவை முடித்தனர்.
Pura Nagar team upset while Mansoor Alikhan sung National anthem