தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் அதிகமான படங்களை கைவசம் வைத்திருப்பவர் யார் என்று கேட்டால் அது பிரியா பவானி சங்கர் தான்.
இவரது நடிப்பில் ‘இந்தியன் 2’ ‘பொம்மை’, ‘அகிலன்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’, ‘டிமான்ட்டி காலனி 2’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
இவரது இவர் தனது நீண்ட நாள் பாய்பிரண்டை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனது காதலரை சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோவுடன் வெளிப்படுத்தியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
தன் இன்ஸ்டாகிராம் பதிவில்… “18 வயதில் ஒன்றாக கடற்கரைக்குச் சென்றோம்.
இப்போது சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் நாங்கள் இதேபோல் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.
தற்போது அந்தக் கனவின்படி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.