பாய்ஸ் ஹாஸ்டலில் சிக்கிய பிரியா பவானி சங்கர்.; வைரலாகும் காட்சிகள்.!

பாய்ஸ் ஹாஸ்டலில் சிக்கிய பிரியா பவானி சங்கர்.; வைரலாகும் காட்சிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘ஹாஸ்டல்’.

இவர்களுடன் நாசர், சதீஷ் கிரிஷ் குமார், முனிஸ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் 2015ல் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின், ரீமேக் படம் இது.

ஹாஸ்டல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார்.

தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரியா பாவனியிடம் 50 ஆயிரம் பெற்று, வேறு வழியே இல்லாமல் அவரை ஹாஸ்டலுக்குள் அழைத்து செல்கிறார் அசோக் செல்வன்.

பின்னர் ஹாஸ்டல் வார்டன் மற்றும் ஃபாதரின் கண்ணில் படாமல் இவரை எப்படி மறைக்கிறார் என்பதே டீசரில் காட்சிகளாக உள்ளது.

விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாய்ஸ் ஹாஸ்டலில் பிரியாவுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியனுமா.? படம் வரும்வரை காத்திருப்போம்.

Priya bhavani shankar in hostel teaser goes viral

‘அருள்நிதி 15’ பட அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது சக்தி ஃபிலிம் பேக்டரி

‘அருள்நிதி 15’ பட அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது சக்தி ஃபிலிம் பேக்டரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Films நிறுவனத்தின் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்

B. சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளது.

அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான நடைமுறைகள், பட்டி தொட்டி வரை, திரைப்படங்களை அவர்கள் கொண்டு சேர்க்கும் பாங்கு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர்கள் மத்தியில் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரினை பெற்று தந்திருக்கிறது.

திரைத்திறையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ள, Sakthi Film Factory நிறுவனம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று அதனை வெளியிடும் பயணத்தில் இறங்கியுள்ளது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களின் MNM Films நிறுவன தயாரிப்பில், YouTubeல் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், தற்போதைக்கு “அருள்நிதி15” என தலைப்பிடப்பட்டிருக்கும், புதிய திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறது Sakthi Film Factory நிறுவனம்.

Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது…

நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார்.

அவரது சமீபத்திய படமான “களத்தில் சந்திப்போம்” திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது.

படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.

படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார்.

பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள்.

ஆனால் இத்திரைப்படம் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும். உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம்.

இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 2021 ஜூலை 21 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெருமையுடன் வெளியிடவுள்ளோம்” என்றார்.

MNM Films நிறுவனம் சார்பில் அரவிந்த் சிங் கூறியதாவது…

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் பெயரைபெற்றிருக்கும் Sakthi Film Factory நிறுவனம், எனது முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தரமான கதைகளை கொண்டு உருவாகும் படைப்புகள், சரியான குழுவினரை சென்றடைந்தால் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடையும், எனும் மிகப்பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குழுவினர் அனைவரின் கனவின் படி உருப்பெற்றதற்கு, மிக முக்கிய காரணமாய் விளங்கிய நடிகர் அருள்நிதி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தரமான ஒரு படைப்பினை உருவாக்கி, அந்த படைப்பு Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகச்சிறந்த நிறுவனத்தால் அங்கீகரிகப்படுவது, மிகப்பெரும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.

இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துக் கொண்டதாவது…

எனது முதல் திரைப்படத்தை இயக்கும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது.

சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற YouTuber களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தேன்.

தற்போது எனது படைப்பு, Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது, மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும்.

அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.

மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றார்.

Arulnithi 15 theatrical rights bagged by Sakthi film factory

ஒலி தொடர்பான தேவைகளுக்கு சென்னையில் ஒரே இடத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் சக்தி பாலாஜி

ஒலி தொடர்பான தேவைகளுக்கு சென்னையில் ஒரே இடத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் சக்தி பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான சவுண்ட் ஸ்டூடியோவுக்கான தேவை சென்னையில் இருப்பதை கருத்தில் கொண்டு, சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி என்.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையின் காரணமாக இன்று தனது பயணத்தை முறைப்படி சவுண்டபிள் தொடங்கியுள்ளது.

ஃபாரம் மாலுக்கு எதிரே ஆற்காடு சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் சவுண்டபிள், திரைத்துறை தொடர்புடைய அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

சவுண்டபிள் ஸ்டூடியோ குறித்து மனம் திறந்த சக்தி பாலாஜி, “மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருப்பது போன்ற தரமான ஒலியகங்கள் சில மட்டுமே சென்னையில் உள்ளன. மேலும், நான் ஒரு இசை அமைப்பாளராகவும் உள்ள காரணத்தால், ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டூடியோ ஒன்று நமது ஊரில் தேவை என்று தோன்றியதன் விளைவாக சவுண்டபிளை தொடங்கி உள்ளேன்,” என்றார்.

மேலும் பேசிய அவர்,
“தற்போது டப்பிங் மற்றும் மிக்சிங் இரண்டு சூட்டுகள் சவுண்டபிளில் உள்ளன. திரைப்பட டப்பிங்கிற்கான ஸ்டீரியோ வசதியுடன் டப்பிங் சூட் உள்ள நிலையில், 7.1 வசதியுடன் மிக்சிங் சூட் உள்ளது. 10 படங்களுக்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில், ஸ்டூடியோவை பயன்படுத்தும் அனைவருமே பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.”
“குறைந்த கட்டணத்தில், மிகச்சிறந்த சேவை மற்றும் வசதிகளை சவுண்டபிள் அளிக்கும். இங்குள்ள அமைதியான மற்றும் அழகான சூழ்நிலை படைப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. வெப் சீரிஸ் எடுப்பவர்கள் டால்பி அட்மாஸ் வசதி கேட்பதால் டால்பி அட்மாஸ் வசதியையும், மற்றுமொரு சூட்டையும் விரைவில் சேர்க்கவுள்ளோம்.
ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதத்தில் சவுண்டபிள் செயல்படும்,” என்று நிறைவு செய்தார் வெப் சீரிஸ் சிலவற்றுக்கும், திரைப்படங்களுக்கும் தற்போது இசை அமைத்து வரும் சக்தி பாலாஜி.

Soundable starts its journey: State-of-the-art sound studio in Chennai

இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’.

இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

4 top heroines join for Director Deekay’s next film

செய்திகளுக்கு தலைப்பிடுவதில் மன்னன் என பெயரெடுத்த வி. ராமசாமி காலமானார்

செய்திகளுக்கு தலைப்பிடுவதில் மன்னன் என பெயரெடுத்த வி. ராமசாமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலைமுரசு (சென்னை பதிப்பு ) ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, ஓய்வு பெற்றிருந்த வி. ராமசாமி அவர்கள் (வயது 87) இன்று (17.07.21) பிற்பகல் 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

வயது மூப்பின் விளைவாக, நோயுற்று கடந்த சில தினங்களாக
உடல் நலம் குன்றியிருந்தார்.

“தலைப்பு போடுவதில் மன்னன்” என்று பெயர் பெற்றவர்.

காலம் தவறாமை, குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு குறித்த நேரத்தில் பத்திரிக்கையை வெளிக்கொண்டுவரும் ஆளுமைத்திறன் கொண்டிருந்தவர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், அவரைத் தொடர்ந்து பா. ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக திகழ்ந்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். அவருடைய பாராட்டுதல்களை நிரம்ப பெற்றவர்.

இப்போது உள்ள வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொலைபேசியில் கொடுக்கும் செய்தியாளர்களின் தகவல்களை மின்னல் வேகத்தில்
எழுதி டைப்பிங் பிரிவுக்கு அனுப்புவதில்
அசகாய சூரராகத் திகழ்ந்தார்.

தமிழ் பத்திரிக்கை உலகம் ஒரு மாபெரும் ஜாம்பவானை இழந்துவிட்டது.

(Contact person son
Balamurughan.R
988463299910,

Bharathi Nagar 1st street, madurevoyal, behind meenakshi dental College)

Malai Murasuu reporter V Ramasamy passes away

லைகா தயாரிப்பில் அதர்வா ராஜ்கிரண் சுரேஷ் துரைசுதாகர் கூட்டணி.; இயக்குனர் இவரா?

லைகா தயாரிப்பில் அதர்வா ராஜ்கிரண் சுரேஷ் துரைசுதாகர் கூட்டணி.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார்.

அதர்வா, ராஜ் கிரண் நடிக்கிறார்கள்.

நாயகியாக முன்னனி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார்.

ராதிகா சரத்குமார், R.K.சுரேஷ், ஜெய பிரகாஷ், துரை சுதாகர் (களவாணி 2 வில்லன்), சிங்கம் புலி, ரவி காலே (கன்னடம்).சத்ரு (கடைக்குட்டி சிங்கம் வில்லன்), பால சரவணன், ராஜ்ஐயப்பா , G.M.குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

லைகா புரடக்ஷன்ஸ் தலைமை செயல் அலுவலர் திரு. G.K.M.தமிழ்குமரன் கட்டமைக்க, நிர்வாக தயாரிப்பை சுப்பு நாராயன்மேற்கொள்கிறார்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான உஸ்தாத் ஓட்டல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிட் -ராஜா முகமது, ஆர்ட் – J.K.ஆண்டனி, காஸ்ட்யூமர்-நட்ராஜ், மேக்கப் மேன்-K.P.சசிகுமாரும், Stills-மூர்த்தி மௌலியும்.

பாடல்கள்-கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடனம்-பாபி ஆண்டனி, தயாரிப்புமேற்பார்வை – M.காந்தன், PRO – சுரேஷ்சந்திரா, ரேகா D’One. காவிரி ஆற்றுப்படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாகஇருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட இருக்கிறது.

யதார்த்தமான குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் விரைவில் ஒரே ஷெட்யூலில் பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

Lyca productions Subaskaran presents Atharvaa Murali starrer a Sarkurnam directorial family entertainer launched

Attachments area

More Articles
Follows