தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் ப்ரியா பவானி சங்கர்.
அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார்.
இவரது நடிப்புக்காகவே சீரியலை பலரும் பார்த்தனர். (ஹி..ஹி.. நாங்களும் பார்த்தோம்ல.)
கடந்த 2016-ம் ஆண்டில் மனங்கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.
இதில் 23-வது இடத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.
நடிகைகள் பட்டியலில் சீரியல் நடிகை ஒருவரே ஒருவர் இடம்பெற்றார் என்றால் அது இவர் மட்டும்தான்.
இந்நிலையில் இவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது…
“நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது உண்மைதான். இப்போதைக்கு அந்த படம் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.
Priya Bhavani sankar makes her entry in Kollywood Cinema