வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ ஹீரோயின்..; சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மீண்டும் ஜோடியாகிறார்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ ஹீரோயின்..; சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மீண்டும் ஜோடியாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில்
விஜய் ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே,

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாநாடு’ படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் நடிக்கும் ‘மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

அந்த படத்தை முடித்துவிட்டு தான் நாக சைதன்யா – பூஜா ஹெக்டே ஜோடியை இயக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு.

கடந்த 2014 ல் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘ஒக்க லைலா கோசம்’ என்ற படத்தில்தான் பூஜா நடித்துள்ளார். இது தெலுங்கில் அவரது அறிமுகப்படம்.

இப்போது மீண்டும் நாகாவுடன் இணைந்து நடிக்கிறார் பூஜா.

Pooja hegde to pair opposite with Naga chaitanya?

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை..; கோர்ட் உத்தரவு

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை..; கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா இசை உலகில் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜா.

இவர் பல இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார.

இந்த நிலையில் தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் இளையராஜா.

ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது “எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்யேகமான உரிமையாகும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்த எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள், எக்கோ, அகி, கிரி டிரேட்டிங், யூனிசிஸ் ஆகிய இசை நிறுவனங்கள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

High court verdict on Ilayaraaja songs copy right issue?

ஒரே நாளில் ரிலீசாகும் சூர்யா-கார்த்தி படங்கள்..; ரசிகர்கள் உற்சாகம்

ஒரே நாளில் ரிலீசாகும் சூர்யா-கார்த்தி படங்கள்..; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியிடப் படக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதே மார்ச் 10ல் கார்த்தியின் ‘கைதி’ படமும் ரிலீசாகிறது. இது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.

2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது.

தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Suriya and Karthi films will release in same day

மிஷ்கின் படத்தில் நடிக்கும் எஸ்ஜேசூர்யா..!? டைரக்டர் யார் தெரியுமா..?

மிஷ்கின் படத்தில் நடிக்கும் எஸ்ஜேசூர்யா..!? டைரக்டர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார் மிஷ்கின்.

ஆனால் கருத்து வேறுபாடுகாரணமாக மிஷ்கின் அந்த படத்திலிருந்து விலக. தற்போது விஷாலே இயக்குனராக மாறி அந்த படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது.

இதன்பின்னர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து ஒரு படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம் மிஷ்கின். அந்த படத்தை மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கவுள்ளார்.

இதில் நாயகனாக எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

எனவே விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mysskin and SJ Suryah joins for a new film?

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சூரி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சூரி கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவர் சினிமாவுக்கு வந்த 10 வருடங்களில் தற்போது 20வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளையும் காட்டி வருகிறார்.

நேற்று சிவகார்த்திகேயன் தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனை வாழ்த்தி அவர் நடித்துள்ள டான், அயலான், எஸ்கே 20 படங்களின் போஸ்டர்கள் வீடியோக்கள் வெளியானது.

சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சூரியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

என் அன்புத் தம்பி செல்லத்தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் சிவகார்த்திகேயன் வீட்டுக்கு கேக்குடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சூரி.

Actor Soori birthday surprise to Sivakarthikeyan

பிரபுதேவா நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் ‘முசாசி’

பிரபுதேவா நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் ‘முசாசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு ‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது.

Actor Prabhudeva will be seen in the role of a Deputy Commissioner of Police in an upcoming film titled Musasi

More Articles
Follows