இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.!

இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya amalaஇவ்வருடம் சூர்யா நடித்த 24 படம் மட்டுமே வெளியானது.

இப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் தெலுங்கு ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தை இன்று கொடுக்கிறார் சூர்யா.

கடந்தாண்டு இவர் நடித்து பெரும் ஹிட்டடித்த பசங்க 2 படத்தின் தெலுங்கு பதிப்பை இன்று வெளியிடுகின்றனர்.

இப்படத்திற்கு தெலுங்கில் மெமு (MEMU) என பெயரிட்டுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக அமலா பால் நடித்திருந்தார். இசை அரோல் கரோலி.

‘மத்தவங்க மாதிரி ரஜினி இல்ல..’ – கபாலி காஸ்டியூம் டிசைனர் அனு

‘மத்தவங்க மாதிரி ரஜினி இல்ல..’ – கபாலி காஸ்டியூம் டிசைனர் அனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth-kabali-anuகபாலி படத்தில் ரஜினிகாந்த் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அதற்கேற்ப உடை டிசைன்களை வடிவமைத்துள்ளார் காஸ்டியூம் டிசைனர் அனுவர்தன்.

இவர் ரஜினியுடன் பணியாற்றிய தன் அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில்…

ரஜினி வயதுக்கேற்ப உடைகளை வடிவமைத்துள்ளேன். நீலம், கருப்பு கோட்டுகளையும் பெரும்பாலும் கிரே கலர் கோட்டுகளை வடிவமைத்துள்ளோம்.

பெரும்பாலும் காட்டன், உல்லன் உடைகளை அவருக்காக வடிவமைத்தோம். இளவயது ரஜினிக்கு கலர்புல்லான பிரிண்டட் டைப் உடைகளை தேர்ந்தெடுத்தோம்.

அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம். டைரக்டர் சொன்னபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.

இளம் கலைஞர்களை ஊக்குவிப்பார். மற்ற நடிகர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்பது போல இருப்பார்கள். ஆனால் ரஜினி எதையும் சொல்லவில்லை.

கேரக்டருக்கு என்ன உடை தேவையோ அதை அணிந்து கொள்வதில் கவனமாக இருந்தார் ரஜினி.”

இவ்வாறு அனு தெரிவித்துள்ளார்.

கபாலி ரூ. 110 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் காஸ்டியூம் பணிகளுக்கு மட்டும் ரூ. 1.4 கோடி செலவழித்துள்ளதாக தாணு தெரிவித்திருக்கிறார்.

சுல்தான் படத்தை மனைவிக்கு காட்ட கணவரின் வித்தியாச ஏற்பாடு.!

சுல்தான் படத்தை மனைவிக்கு காட்ட கணவரின் வித்தியாச ஏற்பாடு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salmankhans sultan special show for one coupleரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சல்மான்கான் நடித்த சுல்தான் நாடு முழுவதும் வெளியானது.

முதல் நாளிலேயே இப்படத்திற்கு ரூ. 38 கோடி வரை வசூல் கிடைதுள்ளதாக கூறப்படுகிறது.

அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆன ஒரு சினிமா தியேட்டரில் ஒரு காட்சியின் அனைத்து டிக்கெட்டுகளையும் (120 டிக்கெட்) சங்கர் முசாபீர் என்பவர் புக் செய்து இருந்தார்.

ஆனால் அந்த காட்சியை அவர் தனது மனைவி கீதாஞ்சலியுடன் மட்டுமே கண்டு களித்திருக்கிறார்.

இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாம்.

தன் மனைவி சல்மான்கானின் தீவிர ரசிகை என்பதால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இந்த சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தாராம் கணவர் சங்கர் முசாபீர்.

ரஜினிகாந்துக்கு மகிழ்ச்சி… சிம்புவுக்கு சிறப்பு..!

ரஜினிகாந்துக்கு மகிழ்ச்சி… சிம்புவுக்கு சிறப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

java bikeதமிழ் சினிமாவில் பன்ச் டயலாக்குகளை பிரபலப்படுத்தியவர் ரஜினி. இவரது படங்களில் பன்ச் டயலாக்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது.

இவரைத் தொடர்ந்து இன்றைய டாப் ஹீரோக்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை இதை பாலோ செய்கின்றனர்.

இந்நிலையில் கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல்களில் ரஜினிகாந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தை படு பாப்புலர் ஆகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்தும் வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) என்ற படத்தில் சிறப்பு என்ற வார்த்தை இணையக்கூடும் எனத் தெரிகிறது.

சற்றுமுன், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் சிம்பு பயன்படுத்தக்கூடிய ஜாவா பைக்கின் போட்டோவை பகிர்ந்து, #Sirappu சிறப்பு என குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் தொடர்பான தகவல்களில் ‘சிறப்பு’ தவறாமல் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

யுவன் இசையமைக்க உள்ள இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் ஸ்ரேயா.

‘அதுல இல்லாமலே பேச வைச்சவரு சுந்தர்.சி’ – குஷ்பு பெருமிதம்.

‘அதுல இல்லாமலே பேச வைச்சவரு சுந்தர்.சி’ – குஷ்பு பெருமிதம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar c and khusbooஇயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி வாகை சூடி வருபவர் சுந்தர் சி.

தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் இயக்கவிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் #SundarC என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது.

இதுகுறித்து இவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ, தன் ட்விட்டரில் பக்கத்தில் கூறியதாவது….

“எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமலே தன் பணி மூலம் தன்னை பற்றி பேசவைத்தவர் சுந்தர் சி. நான் பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முதலில் விஜய்சேதுபதி… அப்புறம்தான் டி.ஆர் வருகிறார்…!

முதலில் விஜய்சேதுபதி… அப்புறம்தான் டி.ஆர் வருகிறார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiகே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

இந்த வித்தியாசமான கூட்டணி அறிவிக்கப்பட்ட உடனே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜூலை 11ஆம் தேதி இதன் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

சில நாட்களுக்கு பின்னர்தான் டி.ராஜேந்தர் இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

More Articles
Follows