சிறந்த மனிதர் சிம்பு; சிறந்த நடிகர் தனுஷ்.. ஓவியா ஓபன் டாக்

சிறந்த மனிதர் சிம்பு; சிறந்த நடிகர் தனுஷ்.. ஓவியா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya dhanush and simbuபிக்பாஸ் மூலம் லட்சணக்கான ரசிகர்கள் சம்பாதித்தவர் ஓவியா.

இவர் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இனி அடிக்கடி இதுபோல் பேச இருப்பதாகவும் ஒரு வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்க ஒருவர் சிம்பு தனுஷ் பற்றி கேட்டுள்ளார்.

சிம்புவை ஒரு சிறந்த மனிராகவும், தனுஷை ஒரு சிறந்த நடிகராகவும் எனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.விஜய்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa vijayபிரபல பாடலாசிரியர் பா.விஜய், அண்மைகாலமாக படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’, ‘ஸ்ட்ராபெரி’ ‘நைய்யப்புடை’ முதலான படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அவர் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆருத்ரா’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், ‘VIL MAKERS PRODUCTIONS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை வித்யாசாகர்.

பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரேமம் நாயகி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரேமம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallaviவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஜோக்கர், தீரன், அருவி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்பட நாயகியாக பிரேம்ம் புகழ் மலர் டீச்சர் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று கமல்; இன்று மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிபிராஜ்

நேற்று கமல்; இன்று மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranga movie imagesசிபிராஜ் தயாரித்து நடித்திருந்த படம் ‘சத்யா’ அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது.

இதே படத்தலைப்பில் கமல் நடித்த படம் பல வருடங்களுக்கு முன் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய சத்யா படத்தில் சிபிராஜ் உடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

‘சத்யா’ படத்தலைப்புக்கு பெருமை சேர்த்த சிபிராஜ், அடுத்ததாக ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற டைட்டிலை கைப்பற்றி உள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பே போக்கிரி ராஜா என்ற ரஜினி படத்தலைப்பில் ஜீவா, சிபிராஜ் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்துவட்டி கொடுமையை சொல்ல வரும் படம் உள்குத்து

கந்துவட்டி கொடுமையை சொல்ல வரும் படம் உள்குத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulkuthuகார்த்திக்ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் உள்குத்து. இப்படம் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், சச்சின், எந்திரன், தசாவதாரம் , சந்திரமுகி, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் வேலைப்பார்த்தேன்.

என் வேலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிகொடுப்பது. இதன் மூலம் தான் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது. அந்த அனுபவத்தில் தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய முதல் படம் “ திருடன் போலீஸ்”.

அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் “ உள்குத்து “ என்ற படத்தைஇயக்கியுள்ளேன் . எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது அங்கு மீன் விற்பனை நடைபெறும் அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாவே கவனித்து வந்தேன்.

மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும் மற்ற நாள்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன் அப்போது தோன்றியது தான் இந்த கதை.

அவர்களை சார்ந்த கதையை எழுதலாம் என்று முடிவுசெய்தேன் அது தான் இந்த உள்குத்து. மேலும் அந்த சந்தையில் மீன் விற்பர்களிடம் தகவல்களை சேகரித்தேன். அதுவும் மிக சுவாரசியமாக இருந்தது. மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காதாம்.

பின்னர் காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள தொன்னுராயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற விஷயத்தை என்னிடம் கூறினார்கள்.

நான் அவர்களிடம் மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் மீனை நாங்கள் ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம் மறுநாள் விற்பனை செய்வோம் என்றார்கள்.

ஆனால் அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம் தான் அடி, உதை கூட சமயத்தில் விழும் எங்களால் எதுவுமே செய்ய முடியாது ஏன்னென்றால் மீண்டும் நாங்கள் அவர்களிடம் தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும் அது கந்து வட்டியா இருக்குமோ என்று கூட எங்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றார்கள்.

அதே போல் அந்த பசங்களும் சில விஷயத்தை என்னிடம் சொன்னார்கள் நான் மீன் வெட்டுகிறேன் ஒரு கிலோக்கு 20 ரூபாய் கிடைக்கிறது ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருப்பத்தைந்து கிலோ வரை மீனை வெட்டுவேன் அதன் பின் எனக்கு எந்த வேலையும் இல்லை என்றான் அந்த சிறுவன்.

நான் இந்த சின்ன பசங்களை மையப்படுத்தி ஒரு ரவுடிதனத்தை உட்புகுத்தி கதை தயார் செய்தேன். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாரவது தவறா பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று கற்பனையில் ஒரு கதையை உருவாக்கினேன்.அவர்களிடம் இதை பற்றி விசாரித்தேன் அவர்களும் என் கற்பனையில் வந்தது போல் அவர்களை சிலர் தவறான விஷயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர்.

அதை மையப்படுத்தியும் ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களை விட நண்பனிடம் தான் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்வான் என்ற விதத்தில் கிட்டதட்ட 25 வருட நட்பை மையப்படுத்தியும், ஒரு நண்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் நண்பன் எப்படி அதை கையாளுவான் என்றும் இந்த கதையை அமைத்தேன். உள்குத்து என்பது உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்று அர்த்தம் இந்த கதையும் அதை சார்ந்து தான் இருக்கும்.

சினிமா துறையை சார்ந்த அசோக் என்பவர் சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் இறந்துவிட்டார் அச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது. மதுரை பேருந்து நிறுத்தத்தில் என் நண்பன் ஒரு கடை வைத்து இருந்தார் அவர்களின் வாழ்கை முறையானதும் அப்படிதான் காலையில் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டால் அதை கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என ஐயாயிரம் ரூபாய் எடுத்துவிட்டு மீதம் நாற்பத்திஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் மாலை அதை திருப்பி தராவிட்டால் பெரிய பிரச்சனையை கடன் வாங்கியவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் கொடுப்பார்கள் இது எல்லா துறையிலும் நடக்கும் ஒன்றாக ஆகிவிட்டது.

ரோட்டோரம் கடை போடுபவர்களுக்கு வங்கி கடன் கொடுக்க போவது இல்லை எனவே வேறுவழி இல்லாமல் அவர்கள் கந்துவட்டி வாங்கி தான் ஆகவேண்டும். அந்த கந்து வட்டி கொடுப்பவர்கள் தன் பணத்தை அடியாள் வைத்து தான் வசூல் செய்வார்கள்.

கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் ஐன்பது பேரில் நான்கு நண்பர்கள் எப்படி இருப்பார்கள் அதில் ஒருவனை ஒரு பிரச்சனையில் தலைவன் கொலை செய்தால் மற்ற நண்பர்கள் எப்படி தலைவனை கையாளுவார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதை ஒரு வருடத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதால் தற்போதைய நிகழ்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. திருடன் போலீஸ் படத்தின் படபிடிப்பின் போதே நான் , தினேஷ், பாலசரவணன் ஆகிய மூவரும் மீண்டும் இணைவதாக முடிவுசெய்துவிட்டோம்.

தினேஷ் கதைக்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் ஒரு நபர். படத்தின் கதாநாயகி சாதாரணமா துணிக்கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளார். ஏற்கனவே நந்திதா தினேஷ் இருவரும் அட்டகத்தியில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் எனவே நந்திதாவையே கதாநாயகியாக முடிவு செய்தோம். இந்த படத்தில் தினேஷுக்கு அழுக்கான மீன் வெட்டும் பையன் ரோல்.

படப்பிடிப்பின் பெரும் பகுதியை முட்டம் என்ற இடத்தில நடத்தினோம் அருமையான இடமாக இருந்தது. ஜஸ்டின் பிரபாகரனை பண்ணையாரும் பத்மினியும் இசை வெளியீட்டு விழாவில் முதல் முதலில் பார்த்தேன் அவர் மேடயில் எதுவும் பேசாமல் கடவுளுக்கு நன்றி என சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.

அதன் பின் பாடல்களை திரையிட்டனர் பாடல்கள் அருமையாக இருந்தது. அப்போதே அடுத்த படத்தில் அவருடன் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். படத்தின் சில காட்சிகளை பார்த்து படத்திற்கு பாடல்கள் அமைக்கபட்டது.

படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் ஒரு பாடலை பாடலாசிரியர் விவேக் மற்றொரு பாடலை கவிஞர் கட்டளை ஜெயா எழுதியுள்ளார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் P.K வர்மா இவர் அட்டக்கத்தி, குக்கூ போன்ற படங்களில் வேலை பார்த்தவர். குக்கூ படத்தை பார்த்து அவருடனும் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

எனக்கு காமெடி மற்றும் அதை சார்ந்த உணர்ச்சிவசமான கதைகளையே படமாக எடுக்க பிடிக்கும் தேவைபட்டால் கிராபிக்ஸ் அமைதுக் கொள்வேன் ஆனால் கிராபிக்ஸ் சார்ந்த படம் எடுக்க மாட்டேன்” என்றார் இயக்குநர் கார்த்திக்ராஜு.

விஜய் டிவி புகழ் டிடி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு

விஜய் டிவி புகழ் டிடி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DD with her husbandவிஜய் டிவி என்றாலே கூடவே நம் நினைவுக்கு வருபவர் டிடி என்ற் திவ்யதர்ஷினி.

இவருக்கென்று சின்னத்திரையில் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

இவருக்கும் இவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தற்போது 35 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என சொல்லப்படுகிறது.

அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

ஆகவே டிடி எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows