‘தமிழ்நாட்டில் வாழு; ஆளாதே…’ எச்சரிக்கும் பாரதிராஜா

‘தமிழ்நாட்டில் வாழு; ஆளாதே…’ எச்சரிக்கும் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathirajaமே17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, பொது இடத்தில் சட்ட விரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், நான்கு பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இன்று சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…

‘திருமுருகன் என கொலையாளியா, எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது?

யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு?

நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்கு போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்துள்ளேன்.

அதற்காக என் மீதும் குண்டர் சட்டத்தை போடுங்கள்.

தமிழ்நாட்டு மண்ணில் பிறந்தவன்தான் தமிழகத்திற்கு தலைவனாக வேண்டும்.

இம்மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை இல்லை.

வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழனால் தலைவனாக முடியுமா?

மற்ற மாநிலத்தவர்கள் இங்கு வாழலாம். அவர்களை அரவணைப்போம்.

அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது.” என ஆவேசமாக பேசினார் இயக்குனர் இமயம்.

Only Tamizhans must rule Tamilnadu says Director Bharathiraja
bharathiraja

பாட்ஷா பாதி; எஜமான் மீதி…? இதுதான் ‘காலா’

பாட்ஷா பாதி; எஜமான் மீதி…? இதுதான் ‘காலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala movie connects with Baasha and Ejamaanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பல மொழிகளில் 163 படங்களில் நடித்துவிட்டாலும் அவரது மாஸான நடிப்பில் இன்றளவும் பேசப்படும் படமாக உள்ள படம் பாட்ஷா.

இதில் பம்பாய் தாதாவாக மிரட்டியிருந்தார். இப்படத்தின் கிளாஸ் மற்றும் டான் ஆடைகள், ஆட்டோ டிரைவர் ஆடைகள் பெரிதாக பேசப்பட்டது.

மேலும் இதில் தன் நண்பனுக்காக தனது பெயரை பாட்ஷா என்ற இஸ்லாமிய பெயராக மாற்றி நடித்திருப்பார்.

இனி பாட்ஷா போன்ற ஒரு படம் உருவாகாது.

எனவேதான் அதன் 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்து இருந்தார்.

அதுபோல் ரஜினி பல படங்களில் பேண்ட் ஷர்ட், ஜிப்பா, கோட் சூட் என பல வகையான உடைகளில் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க வேஷ்டி சட்டை அணிந்து, ஊருக்கே நன்மை செய்யும் நல்லவராக எஜமான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது உருவாகும் காலா படத்தில், மும்பை டானாகவும் இஸ்லாமிய தோற்றத்துடன் குல்ல போட்டு நடித்து வருகிறார்.

அதே சமயம் எஜமான் ஸ்டைலில் வேஷ்டி அணிந்து நடித்து வருகிறார் ரஜினி.

எனவே, காலாவில் பாட்ஷா மற்றும் எஜமான் என இரண்டும் கலந்த ஸ்டைல் லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kaala movie connects with Baasha and Ejamaan

kaala rajini cap

இளையராஜா பிறந்தநாளில் இசை பிரியர்களுக்கு சிம்பு விருந்து

இளையராஜா பிறந்தநாளில் இசை பிரியர்களுக்கு சிம்பு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu_AAAஇசைஞானி இளையராஜா அவர்கள், தன் பிறந்தநாளை ஜூன் 2ஆம் தேதி கொண்டாடுகிறார்.

எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினர் ஒரு சிறப்பு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ரோட்டுல வண்டி வருது’ என்று தொடங்கும் ஆன்மிக பாடலை இளையராஜா பாட, யுவன் இசையமைத்துள்ளார்.

அஸ்வின் தாத்தா கேரக்டருக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை இளையாராஜா பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும், ரம்ஜான் திருநாளில் படம் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளார்.

STR‏Verified account @iam_str
#SpiritualGanaa #RottulaVandiOodudhu single on #June2nd marking the birthday of #Maestro #Ilayaraja #AAA1D @Adhikravi @thisisysr #Eid2017

‘ரஜினி ஜீப்பை கொடுத்துடுறோம்..’ மகிந்திராவிடம் தனுஷ் உறுதி

‘ரஜினி ஜீப்பை கொடுத்துடுறோம்..’ மகிந்திராவிடம் தனுஷ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanushரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்.

இதில் ரஜினி ஒரு ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த, மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகிந்திரா,

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற லெஜன்ட் அமரும் அரியணையாகப் எங்கள் ஜீப் பயன்பட்டதால், அதுவும் லெஜன்டாகிவிட்டது.

அது இப்போது இருந்தால் எங்கள் நிறுவன மியூசியத்தில் வைப்போம்”, என்று ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காலா தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது…

தற்போது அது ரஜினியின் காலா சூட்டிங்கில் உள்ளது. படம் முடிந்ததும் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

anand mahindra‏Verified account @anandmahindra
When the legend @superstarrajini uses a car as a throne, it becomes a legend…#Thar

Dhanush‏Verified account @dhanushkraja
Dhanush Retweeted anand mahindra
Thank you so much sir !!! The vehicle is being used by superstar for shoot currently. Once completed will ensure it reaches you

Four National award winners joins with Rajini in Kaala movie

‘கொடி வீரன்’ படத்தில் சசிகுமார் உடன் 3 நாயகிகள்

‘கொடி வீரன்’ படத்தில் சசிகுமார் உடன் 3 நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar Muthaiya combo KodiVeeran has 3 heroinesசசிகுமார் தன் கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் 10வது படம் ‘கொடிவீரன்’.

இப்படத்தை முத்தையா இயக்க, இதன் பணிகள் தற்போது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சசிகுமாருடன் மஹிமா, சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

தற்போது மற்றொரு நாயகியாக பூர்ணாவும் இணைந்திருக்கிறார்.

இத்தகவலை சசிகுமாரே தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sasikumar Muthaiya combo KodiVeeran has 3 heroines

kodi veeran 3 heroines

 

இரண்டு ஹீரோ-ஹீரோயின்கள் அறிமுகமாகும் “வெற்றிப்பாதை”

இரண்டு ஹீரோ-ஹீரோயின்கள் அறிமுகமாகும் “வெற்றிப்பாதை”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VetriPaadhai movie pooja and shooting news updatesவெற்றி வேல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பஞ்ச் பாரத்தின் புதிய திரைப்படம் “வெற்றிப்பாதை”.

இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் நடைப்பெற்றது.”

இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

இதில் கதை, திரைக்கதை, வசனம் பஞ்ச் பரத் எழுத, குணா இயக்குகிறார்.

ஸ்ருதி குமார் இசையில், அசோக் ஒளிப்பதிவு செய்ய, அட்சயா ஆனந்த், ஈஸ்வர் பாபு நடனம் அமைக்க, மக்கள் தொடர்பை செல்வரகு கவனிக்கிறார்.

மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர், பாண்டிச்சேரி, சென்னை அதன் சுற்று புறங்களில் நடைபெறுகிறது.

VetriPaadhai movie pooja and shooting news updates

vettri paathai

More Articles
Follows