தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மே17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து, பொது இடத்தில் சட்ட விரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், நான்கு பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இன்று சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…
‘திருமுருகன் என கொலையாளியா, எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது?
யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு?
நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்கு போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்துள்ளேன்.
அதற்காக என் மீதும் குண்டர் சட்டத்தை போடுங்கள்.
தமிழ்நாட்டு மண்ணில் பிறந்தவன்தான் தமிழகத்திற்கு தலைவனாக வேண்டும்.
இம்மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை இல்லை.
வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழனால் தலைவனாக முடியுமா?
மற்ற மாநிலத்தவர்கள் இங்கு வாழலாம். அவர்களை அரவணைப்போம்.
அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது.” என ஆவேசமாக பேசினார் இயக்குனர் இமயம்.
Only Tamizhans must rule Tamilnadu says Director Bharathiraja